
எம்பிஏவில் சேருவோரின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 4,000 எம்பிஏ கல்வி நிலையங்கள் உருவாயின. ஆனால், இதில் பெரும்பாலான கல்வி மையங்களில் சுமார் 35 சதவீத இடங்கள் காலியாகவே உள்ளன.
அதிலும் 140 கல்வி நிலையங்களில் மிக மிகக் குறைவானவர்களே சேர்ந்து வருவதால், அவை மூடப்படவுள்ளன.
எம்பிஏ பட்டம் என்ற பெயரில் பெருமளவில் காசு பிடுங்கிக் கொண்டு கல்வி அளித்து வந்த இந்த நிறுவனங்களில் இப்போது சேர ஆளில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி படு வேகமாக இருந்த நிலையில், வேலைவாய்ப்புகளும் மிக அதிகமாக உருவாயின. இதையடுத்து எம்பிஏ பட்டதாரிகளுக்கு தேவையும் அதிகமாக இருந்தது.
ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் இந்த நிதியாண்டில் தான் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் மிக மிகக் குறைவான நிலையை அடைந்துள்ளது. இதனால் வேலைவாய்ப்புகள் உருவாக்கமும் குறைந்துவிட்டது. இதனால் ஏராளமான பணத்தை செலவிட்டு எம்பிஏ பயின்றாலும் வேலை கிடைப்பது கஷ்டமே என்ற நிலையால், அதில் சேருவோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் 3,52,000 எம்பிஏ இடங்கள் உருவாயின. இதில் ஐஐஎம்கள் மற்றும் நாட்டின் 20 முன்னணி கல்வி மையங்களில் எம்பிஏ படிப்போர் தான் கேம்பஸ் மூலம் வேலைகளுக்குத் தேர்வாகின்றனர்.
இந்த கல்வி மையங்களிலும் கடந்த 2008ம் ஆண்டில் 41 பேருக்கு கேம்பசிலேயே வேலை கிடைத்தது. ஆனால், 2011-12ம் ஆண்டில் வெறும் 29 சதவீதம் பேருக்கே வேலை கிடைத்துள்ளது.
முன்னணி கல்வி நிலையங்களிலேயே இந்த நிலை என்றால், மற்ற கல்வி நிலையங்கள் குறித்து சொல்லவே வேண்டாம்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications