சென்னை ஐஐடியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு பேராசிரியர் கூட இல்லை!

சென்னை ஐஐடியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு பேராசிரியர் கூட இல்லை!
டெல்லி: சென்னை ஐஐடியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட பேராசிரியராக இல்லை என்பது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

இந்த கல்வி மையத்தில் மொத்தம் 212 பேராசிரியர்களும், 91 இணைப் பேராசிரியர்களும், 177 துணைப் பேராசிரியர்களும் உள்ளனர்.

ஆனால், இதில் ஒருவர் கூட பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் இல்லை. அதே போல தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வெறும் 3 பேர் தான் பேராசிரியர்களாகவும், 3 பேர் தான் இணைப் பேராசிரியர்களாகவும், 4 பேர் மட்டுமே துணைப் பேராசிரியர்களாகவும் உள்ளனர்.

பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த ஒரே ஒருவர் மட்டுமே துணைப் பேராசிரியராக உள்ளார்.

பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட பேராசிரியராக இல்லை என்பது மட்டுமல்ல, இணைப் பேராசிரியராகக் கூட இல்லை. ஆனால், துணைப் பேராசிரியர்கள் பதவியில் மட்டும் 7 பேர் உள்ளனர்.

ஐஐடிக்களில் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு இல்லாததே இதற்குக் காரணமாகும். துணைப் பேராசிரியர் பதவிக்கான தேர்வில் மட்டுமே இட ஒதுக்கீடு உள்ளது. இதனால் தான் இந்தப் பதவிக்காவது பிற்படுத்தப்பட்டவர்கள் வர முடிந்துள்ளதாகத் தெரிகிறது.

இதே நிலைமை தான் ஐஐடி காரக்பூர், ஐஐடி காந்திநகர், ஐஐடி ரூர்கி, ஐஐடி ரோபர் என பல இடங்களிலும் நிலவுகிறது.

ஐஐடி ஹைதராபாதில் மட்டுமே 22 பிற்படுத்தப்பட்டவர்கள் பேராசிரியர்களாக உள்ளனர்.

இந்தத் தகவல்களை தகவல் பெறும் சட்டத்தின் கீழ் மகேந்திர பிரதாப் சிங் என்பவர் திரட்டியுள்ளார். ஐஐடி டெல்லி, ஐஐடி மும்பை ஆகியவை இவருக்கு இன்னும் பதிலைத் தரவில்லை. தந்தால் தான் அதன் வண்டவாளம் தெரியவரும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+