டீசல் விலையை உயர்த்தியாச்சு! அப்புறம் என்ன ஆம்னி பஸ்டிக்கெட் விலையும் விர்ர்ர்...

சாதாரண ஆம்னி பஸ்களுக்கு ரூ.30 என்றும், குளிர்சாதன வசதியுடைய பஸ்களுக்கு ரூ.50 என்றும் கட்ட்டண உயர்வை நிர்ணயித்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேதாரண்யம், வேளாங்கண்ணி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்களுக்கு டிக்கெட் விலையில் ரூ.30-ம், திருச்சி, மதுரை வழியாக தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களுக்கு டிக்கெட் விலையில் ரூ.50-ம் உயர்த்தப்பட்டுள்ளது. சொல்வதுதான் இந்த விலை என்றாலும் வழக்கம் போல தங்களது இஷ்டத்துக்குத்தான் ஆம்னி பஸ்கள் வசூலித்து வருகின்றன என்பது முக்கியமானது.
இத்தகைய கட்டண உயர்வுகளால் வெளியூருக்கு அடிக்கடி செல்பவர்கள், குடும்பத்துடன் செல்பவர்கள் உள்ளிட்ட பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.


Click it and Unblock the Notifications