சாதாரண ஆம்னி பஸ்களுக்கு ரூ.30 என்றும், குளிர்சாதன வசதியுடைய பஸ்களுக்கு ரூ.50 என்றும் கட்ட்டண உயர்வை நிர்ணயித்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேதாரண்யம், வேளாங்கண்ணி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்களுக்கு டிக்கெட் விலையில் ரூ.30-ம், திருச்சி, மதுரை வழியாக தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், திருவனந்தபுரம் ஆகிய ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களுக்கு டிக்கெட் விலையில் ரூ.50-ம் உயர்த்தப்பட்டுள்ளது. சொல்வதுதான் இந்த விலை என்றாலும் வழக்கம் போல தங்களது இஷ்டத்துக்குத்தான் ஆம்னி பஸ்கள் வசூலித்து வருகின்றன என்பது முக்கியமானது.
இத்தகைய கட்டண உயர்வுகளால் வெளியூருக்கு அடிக்கடி செல்பவர்கள், குடும்பத்துடன் செல்பவர்கள் உள்ளிட்ட பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள்.