சென்னை: அந்தமான்-நிக்கோபார் தீவுகளுக்கு இடையிலான போக்குவரத்திற்கு ரூ.400 கோடி மதிப்பிலான 500 பேர் பயணிக்கும் வசதி கொண்ட 2 கப்பல்களை வாங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
அந்தமானில் உள்ள போர்ட் பிளேயரின் லட்ஷதீப் துறைமுகப் பணிகளுக்காக புதிய அலுவலக வளாகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கப்பல் துறை அமைச்சக செயலாளர் பி.கே.சின்ஹா, அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் தலைமை செயலாளர் ஆனந்த் பிரகாஷ், முதன்மை செயலாளர் ஜால்ஸ் ஸ்ரீவாஸ்தவ் ஆகியோர் கலந்து கொண்டனர். மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் விழாவிற்கு தலைமை தாங்கி, புதிய அலுவலக வளாகத்தை திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய ஜி.கே.வாசன், அந்தமான்-நிக்கோபார் தீவுகளுக்கு இடையிலான போக்குவரத்திற்காக ரூ.400 கோடி மதிப்பிலான 2 புதிய கப்பல்களை வாங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இந்திய கப்பல் துறை அமைச்சகத்தின் கீழ் கடந்த 1956ம் ஆண்டு அந்தமான் லட்ஷதீப் துறைமுகப் பணிகள் நிறுவப்பட்டது. ஆனால் சுனாமி பாதிப்பில் சிக்கிய அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் துறைமுகம் மற்றும் படகு துறைகள் கடும் சேதமடைந்துள்ளன. மேலும் தீவுகளுக்கு இடையிலான போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் கப்பல்களும், படகுகள் நாள்பட்டதாகிவிட்டது.
எனவே தீவுகளின் கப்பல் மற்றும் படகு சேவையை புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர், 1200 நபர்களை ஏற்றி செல்லும் திறன் கொண்ட 4 கப்பல்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தது. மேலும் தீவுகளின் உள்பகுதிகளில் பயணிகள் போக்குவரத்திற்காக 500 பயணிகளை ஏற்றி செல்லும் திறன் கொண்ட 4 கப்பல்களை வாங்கவும் பரிந்துரை செய்தது.
இதில் ரூ.400 கோடி மதிப்பிலான 500 பயணிகளை ஏற்றி செல்லும் திறன் கொண்ட 2 கப்பல்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 2014ம் ஆண்டு முடிவில் இந்த 2 கப்பல்களும் பயன்பட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வான் வழி மற்றும் கடல்வழி மார்க்கங்களில் அதிக போக்குவரத்து வசதிகளை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2020ம் ஆண்டிற்குள் நாட்டின் கப்பல் போக்குவரத்து துறையில் பெரும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications