சென்னை: அந்தமான்-நிக்கோபார் தீவுகளுக்கு இடையிலான போக்குவரத்திற்கு ரூ.400 கோடி மதிப்பிலான 500 பேர் பயணிக்கும் வசதி கொண்ட 2 கப்பல்களை வாங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
அந்தமானில் உள்ள போர்ட் பிளேயரின் லட்ஷதீப் துறைமுகப் பணிகளுக்காக புதிய அலுவலக வளாகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் கப்பல் துறை அமைச்சக செயலாளர் பி.கே.சின்ஹா, அந்தமான்-நிக்கோபார் தீவுகளின் தலைமை செயலாளர் ஆனந்த் பிரகாஷ், முதன்மை செயலாளர் ஜால்ஸ் ஸ்ரீவாஸ்தவ் ஆகியோர் கலந்து கொண்டனர். மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் விழாவிற்கு தலைமை தாங்கி, புதிய அலுவலக வளாகத்தை திறந்து வைத்தார்.
விழாவில் பேசிய ஜி.கே.வாசன், அந்தமான்-நிக்கோபார் தீவுகளுக்கு இடையிலான போக்குவரத்திற்காக ரூ.400 கோடி மதிப்பிலான 2 புதிய கப்பல்களை வாங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
இந்திய கப்பல் துறை அமைச்சகத்தின் கீழ் கடந்த 1956ம் ஆண்டு அந்தமான் லட்ஷதீப் துறைமுகப் பணிகள் நிறுவப்பட்டது. ஆனால் சுனாமி பாதிப்பில் சிக்கிய அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் துறைமுகம் மற்றும் படகு துறைகள் கடும் சேதமடைந்துள்ளன. மேலும் தீவுகளுக்கு இடையிலான போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் கப்பல்களும், படகுகள் நாள்பட்டதாகிவிட்டது.
எனவே தீவுகளின் கப்பல் மற்றும் படகு சேவையை புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர், 1200 நபர்களை ஏற்றி செல்லும் திறன் கொண்ட 4 கப்பல்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தது. மேலும் தீவுகளின் உள்பகுதிகளில் பயணிகள் போக்குவரத்திற்காக 500 பயணிகளை ஏற்றி செல்லும் திறன் கொண்ட 4 கப்பல்களை வாங்கவும் பரிந்துரை செய்தது.
இதில் ரூ.400 கோடி மதிப்பிலான 500 பயணிகளை ஏற்றி செல்லும் திறன் கொண்ட 2 கப்பல்களை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வரும் 2014ம் ஆண்டு முடிவில் இந்த 2 கப்பல்களும் பயன்பட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வான் வழி மற்றும் கடல்வழி மார்க்கங்களில் அதிக போக்குவரத்து வசதிகளை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2020ம் ஆண்டிற்குள் நாட்டின் கப்பல் போக்குவரத்து துறையில் பெரும் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications