டெல்லி: நாடு முழுவதும் 4 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற மத்திய அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 794 தொண்டு நிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதில், மத்திய அரசின் விதிமுறைகளை மீறி செயல்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பெறும் பணம் தொடர்பான ஆடிட்டிங் அறிக்கைகளை மத்திய அரசுக்கு அளிக்கவில்லை. அதேபோல எந்த செயலுக்காகபணம் பெறப்பட்டது, எப்படி செலவிடப்பட்டது என்றும் தெரிவிக்கவில்லை.
சில தொண்டு நிறுவனத்தினர் சமூக சேவை என்ற பெயரில் வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை ஒரே நாளில் அதிகளவில் வங்கிகளில் இருந்து எடுத்துள்ளனர். இதுகுறித்து புலனாய்வு துறையினர் அறிக்கை அனுப்பியுள்ளனர். இதுபோல் எடுக்கப்படும் பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதை தடுக்க, விதிமுறைகளை மீறும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அட்வைசரி கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியினர் நாடு முழுவதும் இயங்கும் தொண்டு நிறுவன செயல்பாடுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் நாடு முழுவதும் 4 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை பெறக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 794 தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு பணத்தை பெற்றுக் கொள்ளக்கூடாது. ஆந்திராவில் 670, கேரளாவில் 450 தொண்டு நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு பணத்தை பெற தடை விதிக்கப்பட்டுள்ளது
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications