மதுரை: வருங்காலத்தில் கல்லூரிகளில் ஏற்படும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை அந்தந்த கல்லூரிகளே நிரப்பி கொள்ள உரிய ஆணை பிறப்பிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று மூட்டா பொதுச் செயலாளர் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து மூட்டா பொது செயலாளர் பேராசிரியர் த.மனோகர ஐஸ்டஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் 1.6.2008 முதல் நிரப்பப்படாமல் இருந்தன. இந்த பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து பல போராட்டங்களை நடத்தியது.
இந்த சூழலில் தமிழக முதல்வர் கடந்த 17.4.2012 அன்று தமிழக சட்டமன்ற உயர் கல்வி மானியக் கோரிக்கைக்கான விவாதத்தின் போது, தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 1.6.2008 முதல் 31.5.2011 வரை காலியாக உள்ள 3120 ஆசிரியர் பணியிடங்களை உயர்கல்வி நலன் கருதி உடனடியாக நிரப்பிட ஆணை பிறப்பிக்கப்படும் என்றார். இதை மூட்டா வரவேற்றது.
முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து கடந்த 28.5.2012 தேதியிட்ட அரசாணை எண்:79ஐ உயர் கல்வித்துறை வெளியிட்டது. இந்த அரசாணையில் ஒவ்வொரு பாடத்திற்கும் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரகங்கள் வாரியாக நிரப்ப வேண்டிய 3120 ஆசிரியர் பணியிடங்களின் பட்டியல் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அரசாணை வெளியாகி 4 மாதங்களாகியும், ஆசிரியர் காலி பணியிடங்களை பாடம் வாரியாக ஒவ்வொரு கல்லூரியும் நிரப்ப அனுமதி வழங்கும் கல்லூரி கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்படவில்லை. இதனால் பல கல்லூரிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படும் சூழ்நிலை நிலவுகிறது.
மாணவர் நலனை கருத்தில் கொண்டும், தமிழக உயர்கல்வி சிறப்பாக அமைந்திட உடனே ஆசிரியர் பணியிடங்களை உதவி பெறும் கல்லூரிகளில் நிரப்பும் அனுமதியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் வருங்காலங்களில் கல்லூரிகளில் ஏற்படும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை அந்தந்த கல்லூரிகளே உடனடியாக நிரப்ப உரிய ஆணை பிறப்பிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications