இது தொடர்பாக இந்திய கனிம நிறுவனங்கள் கூட்டமைப்பின் செயலாளர் ஆர்.கே. சர்மா கூறியதாவது:
உள்நாட்டு இரும்புத் தாது தேவை குறைந்து வருகிறது. அதே நேரத்தில் ஏற்றுமதியும் சரிவடைந்துவிட்டது. இதனால் இரும்புத் தாது உற்பத்தி குறையக் கூடும். இரும்புத் தாது உற்பத்திக்கு கோவா மாநிலம் தடைவிதித்திருப்பதுதான் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
உள்நாட்டு விநியோகத்தை அதிகரிக்க கடந்த ஆண்டு இரும்புத்தாது ஏற்றுமதி மீதான வரி 20 முதல் 30 விழுக்காடு அதிகரிக்கப்பட்டது. இதனால் ஏற்றுமதி 36.7 விழுக்காடு சரிவடைந்து 6.18 கோடி டன்னாக குறைந்துள்ளது. இரும்புத் தாது ஏற்றுமதியில் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம்.
நடப்பு நிதி ஆண்டில் மொத்தம் 60 விழுக்காடு சரிவடைந்து சுமார் 2.50 கோடி டன்னாக குறையக் கூடும் என்றார் அவர்.