
சகாரா இந்தியா குரூப்பை சேர்ந்த சகாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்ரேஷன் மற்றும் சகாரா வீட்டுமனை முதலீடு நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களும், மாற்றத்தக்க கடன் பத்திரங்கள் மூலம் முதலீட்டாளர்களிடம் இருந்து நிதியை திரட்டியது. ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால், முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து சகாரா நிறுவனங்களுக்கு எதிராக இந்திய பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு வாரியம்(எஸ்.ஈ.பி.ஐ), உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த மாதம் 31ம் தேதி இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப அளிக்குமாறு உத்தரவிட்டது.
மேலும் பாதிக்கப்பட்ட முதலிட்டாளர்களுக்கு 15 சதவீதம் ஆண்டு வட்டியுடன் பணத்தை திரும்ப அளிக்க வேண்டும். 3 மாதங்களில் சகாரா நிறுவனம் நிதியை திரும்ப அளிக்காத பட்சத்தில் சகாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்ரேஷன் மற்றும் சகாரா வீட்டுமனை முதலீட்டு நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்களின் சொத்துகளையும், வங்கி கணக்கையும் முடக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
முதலீட்டாளர்களிடம் பெற்று கொண்ட ஆவணங்களையும் சகாரா நிறுவனங்கள் திரும்ப அளிக்க வேண்டும். இது குறித்து நடவடிக்கைகளை மேற்பார்வையிட ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.அகர்வாலை, உச்சநீதிமன்றம் நியமித்தது. இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் சகாரா குரூப் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றப்பட்ட நிதியை சகாரா குரூப் திரும்ப அளிக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்கான காலஅவகாசத்தை நீட்டித்து அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதையடுத்து அது குறித்த விசாரணை வரும் 19ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications