டெல்லி: காப்பீடு மற்றும் ஓய்வூதியத் துறைகளிலும் நேரடி அன்னிய முதலீட்டுக்கு மத்திய அமைச்சரவை இன்று மாலை அனுமதி அளித்தது. ஆனால், இந்தத் திட்டத்தை எதிர்க்கும் திமுக இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடியது. அதில், பென்ஷன் துறையில் 26 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதித்தும், காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டின் அளவை 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக அதிகரித்தும் முடிவெடுக்கப்பட்டது.
பென்ஷன் துறையில் இதுவரை அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அமைச்சரவையில் திரிணாமுல் காங்கிரஸ்தான் அன்னிய முதலீட்டுக்கான அனுமதியை கடுமையாக எதிர்த்து வந்தது. தற்போது அந்த கட்சி அரசிலிருந்து விலகிவிட்டது. இதனால் மத்திய அரசு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை தயக்கமின்றி மேற்கொண்டு வருகிறது.
காப்பீடு மற்றும் ஓய்வூதியத் துறையில் அன்னிய முதலீடுகளுக்கு அனுமதி தருவதை திமுக எதிர்த்து வருகிறது. இதைக் காட்டும் வகையில் அந்தக் கட்சியின் கேபினட் அமைச்சரான அழகிரி இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
காப்பீடு மற்றும் ஓய்வூதியத் துறையில் அன்னிய முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் பங்குச் சந்தை இன்று ஏறுமுகத்துடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சில்லறை முதலீட்டில் அன்னிய முதலீட்டை அனுமதித்த மத்திய அரசு அதிரடியாக அடுத்தடுத்த பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
ஆனால், இதையெல்லாம் சட்டமாக்க நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். திரிணமூல் காங்கிரஸ் போய்விட்ட நிலையில் மாயாவதி, முலாயம் சிங்கின் ஆதரவோடு காலத்தைத் தள்ளி வரும் மத்திய அரசு இதை எப்படி நிறைவேற்றப் போகிறது என்பது தெரியவில்லை.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications