மும்பை: மும்பை பங்கு சந்தை கடந்த 15 மாதங்களில் முதல் முறையாக 19 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியுள்ளது.
இன்றைய பங்கு வர்த்தகத்தின் தொடக்கத்தில் கணிசமான புள்ளிகள் அதிகரித்து 19 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டியது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பின் முதலாவது முறையாக 19 ஆயிரம் புள்ளிகளை தாண்டியிருக்கிறது மும்பை பங்குச் சந்தை.
இன்றைய சந்தையின் தொடக்கத்தில் ஐசிஐசிஐ, ரிலையன்ஸ், ஐடிசி ஆகியவற்றின் பங்குகள் கணிசமாக உயர்ந்திருந்தன.
இன்று நடைபெற உள்ள பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் காப்பீட்டுத் துறையிலும் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி போன்ற முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் பங்குச் சந்தை உயர்ந்திருக்கலாம் என்கின்றனர் சந்தை வல்லுநர்கள்