
நாமக்கல் மண்டலத்தில் உள்ள 300 கோழிப்பண்ணைகள் மூலம் தினமும் சராசரியாக சுமார் 3 கோடியே 25 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இது தவிர தினசரி 50 லட்சம் முதல் 70 லட்சம் வரை ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா, ஓமன், பக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன.
தேவை அதிகரித்ததை அடுத்து நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த மாதம் உயர்ந்தது. ஒரு முட்டை சில்லரை விலையில் 3ரூபாய் 65 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் பெரும்பாலோனோர் சைவத்திற்கு மாறி முட்டை சாப்பிடுவதை நிறுத்திவிட்டனர். மேலும் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை என்பதாலும் சத்துணவுக்கு அனுப்பப்டும் முட்டையிலும் பாதிப்பு ஏற்பட்டதால் தமிழகம் முழுவதும் முட்டை விற்பனையில் சரிவு ஏற்பட்டது.
இதன் அடிப்படையில் முட்டை கொள்முதல் விலை கடந்த மாதம் 24-ந் தேதி 10- காசுகள் குறைத்து ரூ. 3.55 ஆக நிர்ணயிக்கப்பட்டது.
வியாழக்கிழமையன்று மேலும் 15 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.3.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இது குறித்து நாமக்கல் மண்டல என்.இ.சி.சி. தலைவர் செல்வராஜ் கூறியதாவது :
புரட்டாசி மாதம் காரணமாக நாமக்கல் மண்டல முட்டை விற்பனையில் 15 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக 6 கோடி முட்டைகள் வரை தேங்கியிருக்கும். ஆனால் இப்போது 12 கோடி முட்டைகள் வரை தேக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் டெல்லி, ஐதராபாத், மண்டலத்திலும் முட்டை விலை குறைந்துள்ளது. இதனால் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விற்பனை சரிந்து தேக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் முட்டை விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது என்றும் செல்வராஜ் கூறியுள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications