வத்ராவோட டீலிங்கை பற்றி விசாரணை நடத்த வேண்டும்: டிஎல்எப் இயக்குநர்கள் வலியுறுத்தல்!

டெல்லி: சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வத்ரா மீதான குற்றச்சாட்டு வேறு ஒரு கோணத்தில் விஸ்வரூபமெடுத்திருக்கிறது.

புதிய கட்சியைத் தொடங்கியிருக்கும் அர்விந்த் கெஜ்ரிவாலும் பிரசாந்த் பூஷணும் வத்ரா மீது சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்த குற்றச்சாட்டு, '"டிஎல்எப் நிறுவனம் வழங்கிய 65 கோடி ரூபாய் வட்டியில்லா கடனைக் கொண்டு 300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வத்ரா வாங்கிக் குவித்திருக்கிறார்'" என்பதுதான். வத்ரா மீதான இந்த புகாரை அதிரடியாக காங்கிரஸ் பெருந்தலைகள் எல்லாமே நிராகரித்திருந்தன. இதில் நம்ம ஊர் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜனும் அடக்கம்.

இந்த நிலையில் வத்ரா விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர் டிஎல்எப் நிறுவன பங்குதாரர்கள். மேலும் வத்ராவுக்கு கடன் கொடுத்தது பற்றியும் குறைந்த விலையில் வீடு வழங்கியது பற்றியும் நிறுவன இயக்குநர்கள் குழு கூட்டத்தில் ஒருமுறை கூட விவாதிக்கப்படவில்லை என்றும் அவர்கள் புகார் கூறியுள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+