
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து அதிக அளவில் காய்கறிகள் தமிழ்நாட்டுக்கு சப்ளை செய்யப்படுகிறது. தினசரி 100க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் உதகமண்டலம், மேட்டுப்பாளையம், கோவை, சென்னை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
காய்கறி விலை உயர்வு
இந்த நிலையில் காவிரி நதிநீர் பங்கீட்டு தொடர்பாக, தமிழகம் - கர்நாடகத்திற்கு இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து கடந்த ஒரு வாரகாலமாக சரக்கு மற்றும் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனையடுத்து கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு லாரிகளில் வரும் காய்கறி வரத்து குறைந்தது. சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு தினமும் கர்நாடகாவில் இருந்து 320 லாரிகளில் காய்கறி வரும். கேரட், பீன்ஸ், அவரைக்காய், பீட்ரூட், நூக்கோல், பல்லாரி போன்ற காய்கறிகள் கர்நாடகாவில் இருந்துதான் தமிழகத்திற்கு வருகின்றன. தற்போது வரத்து குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில், ஒரு கிலோ பீன்ஸ் ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்டது. திங்கட்கிழமையன்று அது ரூ.25 ஆக உயர்ந்தது. அதேபோல், அவரைக்காய் ரூ.25-ல் இருந்து ரூ.35 ஆகவும், பீட்ரூட் ரூ.10-ல் இருந்து ரூ.15 ஆகவும், கேரட் ரூ.18-ல் இருந்து ரூ.25 ஆகவும், நூக்கோல் ரூ.12-ல் இருந்து ரூ.15 ஆகவும் அதிகரித்துள்ளது. கர்நாடகாவில் போராட்டம் முடிவுக்கு வந்து சரக்கு போக்குவரத்து மீண்டும் தொடங்கினால் மட்டுமே காய்கறி விலை குறையும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.
தற்போது, அங்கு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதால், மீண்டும் காய்கறி வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அதிகரிக்கும் பட்சத்தில் காய்கறி விலை குறைய வாய்ப்பு இருக்கிறது'' என்றார்.
கர்நாடகாவில் விலை குறைவு
அதேசமயம் கர்நாடக மாநில சந்தைகளில் காய்கறிகள் தேக்கமடைந்துள்ளதால் அங்கு அவற்றின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. மைசூரில் ஒரு கிலே தக்காளி கிலோ 2 ரூபாயாக குறைந்துள்ளது. பீன்ஸ், வெண்டைக்காய், பீட்ரூட், முள்ளங்கி, முட்டைக்கோஸ் உள்ளிட்டவைகளின் விலை 12 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக குறைந்துள்ளது. காய்கறிகள், பழங்கள் தேக்கம் காரணமாக மாண்டியா, மைசூர், சாம்ராஜ்நகர் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications