Subscribe to GoodReturns Tamil
For Daily Alerts
பெங்களூர்: ஜி.எம்.ஆர் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகங்களில் இன்று வருமான வரித்துறை அதிகரிகள் சோதனை மேற்கொண்டனர். வரிஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரினை அடுத்து இந்த சோதனை நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஜி.எம்.ஆர் குழுமம் நாடுமுழுவதும் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு பெங்களூரு தவிர மும்பை, ஐதராபாத், டெல்லி ஆகியநகரங்களில் அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டனர். இதனை ஜி.எம்.ஆர். குழும செய்தித்தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் அர்விந்த் கெஜ்ரிவால் டிஎல்எப், இன்டியா புல்ஸ், ஜி.எம்.ஆர். போன்ற நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் ஜி.எம்.ஆர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary