டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஊஉழல் வழக்கில் பிரதமரையும், நிதி அமைச்சரையும் கூட்டுக் குழு விசாரணைக்கு அழைக்க நாடாளுமன்ற நடைமுறைகளை மாற்றலாம் என்று பா.ஜ.க. தெரிவித்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு மோசடி குறித்து பி.சி.சாக்கோ தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரித்து வருகிறது. இக்குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து எதிர்க்கட்சிகளுமே பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதி அமைச்சர் சிதம்பரம் ஆகியோரை சாட்சிகளாக்கி விசாரணைக்கு அழைக்க வலியுறுத்தி வருகின்றனர். அரசுக்கு ஆதரவு தரும் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளும் கூட இக்கோரிக்கையை ஆதரிக்கின்றன. ஆனால் சாக்கோ இதனை நிராகரித்துவிட்டார்.
இது தொடர்பாக சாக்கோவுக்கு பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா நேற்று ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், இந்த விவகாரத்தில் வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றாமல், அவைத் தலைவரின் அனுமதியைப் பெற்று ஜே.பி.சி. சிறப்பு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும். இவ்வழக்கில் பிரதமரையும், நிதி அமைச்சரையும் கூட்டுக் குழு விசாரணைக்கு அழைக்க நாடாளுமன்ற நடைமுறைகளை மாற்றலாம். இதன்மூலம் புதிய முன்னுதாரணத்தை ஏற்படுத்தலாம் என்று கூறியுள்ளார். மேலும் இதே விவகாரத்தில் நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவின் முன் ஆஜராக பிரதமர் ஏற்கெனவே முன்வந்தார். எனவே ஜே.பி.சி. முன் ஆஜராவதற்கு அவருக்கு எந்த ஆட்சேபனையும் இருக்காது என்று தமது கடிதத்தில் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications