சென்னை : சமையல் எரியவாயு சிலிண்டரில் முறைகேடு நடைபெறுவதை தடுக்க ‘ஸ்மார்ட் கார்டு' மூலம் ரகசிய குறியீடு எண் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறைகளை இந்த நிதியாண்டு முடிவடையும் மார்ச் மாதத்திற்குள் சோதனை முறையில் செயல்படுத்த எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
இதுகுறித்து பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஜார்ஜ் பால் கூறியதாவது :
6 சிலிண்டர்கள்
சிலிண்டர் முறைகேடுகளைத் தடுப்பதற்காக பார்-கோடிங், ஆர்எஃப்ஐடி கார்டு மற்றும் ஜிபிஆர்எஸ் ஆகிய 3 வெவ்வேறு முறைகளை சோதனை முறையில் படிப்படியாக செயல்படுத்த திட்டமிட்டிருந்தோம்.
இந்நிலையில், ஒரு வாடிக்கையாளருக்கு ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளதால், இந்த முறையை விரைவாக அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனவே, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சோதனை முறையில் 3 முறைகளும் செயல்படுத்தப்படும். பின்னர் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்.
ஸ்மார்ட் கார்டு முறை
பார்கோடிங் முறையின் கீழ், வாடிக்கையாளர்களின் கேஸ் இணைப்புப் புத்தகத்தின் மீது பார்கோடு எண் ஒட்டப்படும். ஏஜென்சி ஊழியர், சிலிண்டர் வழங்கும்போது அதற்கென உள்ள கருவியைக் கொண்டு வாடிக்கையாளரின் பார்கோடு எண்ணைப் பதிவு செய்து விடுவார். இதன்மூலம் எத்தனை சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது என்பதை கம்ப்யூட்டரிலேயே தெரிந்துகொள்ள முடியும். இதுபோல, ஆர்எஃப்ஐடி கார்டு முறையின் கீழ், வாடிக்கையாளருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். சிலிண்டரைப் பெறும் வாடிக்கையாளர் ஊழியர் கொண்டுவரும் கருவியில் அந்த கார்டை தேய்த்து ரகசிய குறியீட்டெண்ணை பதிவு செய்ய வேண்டும்.
முறைகேடுகள் தவிர்க்கப்படும்
தற்போது சிலிண்டர் விநியோகிக்கும்போது வாடிக்கையாளரிடம் உள்ள இணைப்பு புத்தகத்தில் பதிவு செய்யப்படுகிறது. எத்தனை சிலிண்டர் வாங்கப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் அறியலாம்.
ஆனால் பலர் இந்த புத்தகத்தை தொலைத்து விடுகிறார்கள். ஒரே நபர் பல முகவரிகளிலோ அல்லது ஒரே முகவரியிலோ ஒன்றுக்கும் மேற்பட்ட எரிவாயு இணைப்பு பெற்றுள்ளார். இதுபோன்ற முறைகேடுகள் புதிய முறைகளின் மூலம் தவிர்க்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications