பறவைக் காய்ச்சல் எதிரொலி: இந்திய கறிக்கோழி, முட்டை இறக்குமதிக்கு தடைவிதித்த ஓமன்

By Siva
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துபாய்: கர்நாடகாவில் பறவைக் காய்ச்சல் பரவியதையடுத்து இந்தியாவில் இருந்து கறிக்கோழிகள், முட்டைகளை இறக்குமதி செய்ய ஓமனில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதை உலக விலங்குகள் நல அமைப்பு கடந்த வாரம் உறுதி செய்தது. இதையடுத்து இந்தியாவில் இருந்து கறிக்கோழிகள் மற்றும் முட்டைகளை இறக்குமதி செய்ய ஓமனில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இந்த வாரம் முதல் அமலில் உள்ளது.

 

முன்னதாக ஒரிசா, திரிபுரா மற்றும் மேகாலயாவில் பறவைக் காய்ச்சல் பரவியதையடுத்து கடந்த மார்ச் மாதம் ஓமனில் இந்திய கறிக்கோழிகள் மற்றும் முட்டைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த தடை கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி தான் நீக்கப்பட்டது. தடை நீக்கப்பட்ட 2 மாதத்திற்குள் இந்திய கறிக்கோழிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் பறவைக் காய்ச்சல் பரவியதன் எதிரொலியாக அங்கிருந்து தமிழகத்திற்கு வரும் கோழி மற்றும் முட்டை லாரிகள் எல்லையிலேயே பரிசோதிக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன. தீபாவளி நேரத்தில் கோழி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: poultry தடை
English summary

Oman bans poultry imports from India | பறவைக் காய்ச்சல் எதிரொலி: இந்திய கோழி, முட்டைக்கு இறக்குமதிக்கு ஓமன் தடை

Oman has banned the import of poultry and poultry products from India for a second time this year following an outbreak of bird flu virus in Karnataka. The decision was taken following reports that an avian influenza outbreak in Bangalore was confirmed by the World Organisation for Animal Health (OIE) last week.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X