சென்னை: சென்னை மருத்துவக் கல்லூரியில் 4 வருடம் மருத்துவம் சார்ந்த படிப்பு புதிதாக தொடங்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் வே.கனகசபை செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பேச்சு வளர்ச்சிக்கு காது கேட்பது மிகவும் அவசியம். முதல் 3 வயதிற்குள் குழந்தை பேசக் கற்று கொண்டுணரும். காது கேளாமை குழந்தையின் பேச்சு வளர்ச்சி மட்டுமின்றி கல்வி, குடும்பத்தில் மன உளைச்சல் மற்றும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும்.
உலக சுகாதார நிறுவனம் 2005ம் ஆண்டு எடுத்த கணக்கின்படி உலக அளவில் காது கேளாதோர் எண்ணிக்கை 2,780 லட்சமாகும். இந்தியாவில் மட்டும் 63 லட்சம் பேர் காது கேளாத குறைபாடு உள்ளவர்கள். ஆனால் காது மற்றும் பேச்சு குறைபாடுகளை கண்டறியும் நிபுணர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது.
காது மற்றும் பேச்சு குறைபாடு உள்ளவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்து தகுந்த சிகிச்சை அளிக்க பி.ஏ.எஸ்.எல்.பி பட்டப்படிப்பு சென்னை மருத்துவக் கல்லூரியில் நடத்தப்படுகிறது. இது தான் முதன் முதலாக மாநில அரசால் நடத்தப்படும் கல்லூரி ஆகும். இது 4 வருட பட்டப்படிப்பாகும்.
இந்த படிப்பிற்கான அனுமதியை இந்திய மறு வாழ்வு கவுன்சில் வழங்கியுள்ளது. இந்த படிப்பை ஆய்வு செய்ய அக்டோபர் 6ம் தேதி சென்னை மருத்துவக் கல்லூரிக்கு கவுன்சில் வந்தது. இந்த படிப்புக்கு தேவையான கூடுதல் புத்தகங்கள் மற்றும் கூடுதல் உபகரணங்கள் வாங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வருடத்திற்கு 25 மாணவர்கள் படிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ரூ.8 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் நூலகத்துக்கு வாங்கப்பட்டுள்ளது. பேச்சு பிரிவிற்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள உபகரணங்களும் வாங்கப்பட்டுள்ளது என்றார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications