ஜூலை மாதம் வரையிலான 7 மாதங்களில் தேங்காய் ஏற்றுமதி 50% வளர்ச்சியைத் தொட்டிருக்கிறது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் இந்திய தேங்காய்க்கு நல்ல விலை கிடைக்கிறது. பெரிய தேங்காய் ஒன்று ரூ10க்கு வாங்கப்பட்டு அந்நாடுகளில் ரூ13.50 வரை விற்கப்படுகிறது. ஏற்றுமதியாகும் தேங்காயில் கணிசமான அளவு தமிழகத்தில் இருந்தே செல்கிறது.
இந்த நிலையில் இந்தியாவின் தேங்காய் ஏற்றுமதிக்கு சவாலாக இலங்கை உருவெடுத்திருக்கிறது. தேங்காய் ஏற்றுமதியில் இலங்கை முன்னணி வகித்து வந்தது. ஆனால் அந்நாட்டில் உள்நாட்டுத் தேவை அதிகரித்ததால் தேங்காய் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் நமது ஏற்றுமதியாளர்களுக்கு இது சாதகமாக இருந்து வந்தது.
தற்போது இலங்கையில் தடை நீக்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவை விட குறைந்த விலையில் ஏற்றுமதி செய்து பெரும் நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது என்கின்றனர் ஏற்றுமதியாளர்கள்...
குடைச்சல் கொடுப்பதுதான் இலங்கையின் வேலையேவா?