Subscribe to GoodReturns Tamil
For Daily Alerts
டெல்லி:இந்தியாவில் விமான சேவையில் அன்னிய முதலீட்டுக்கு அனுமதி கொடுத்தது முதல் அபுதாபியின் மிகப் பெரிய ஏர்வேஸ் நிறுவனமான எதிஹாட் எந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கப் போகிறது என்ற பரபரப்பு செய்திகள் ரெக்கை கட்டி பறக்கின்றன.
கடந்த வாரம் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம், கிங்பிஷர் ஏர்லைன்ஸை வாங்கப் போவதாக தகவல்கள் பரவின. இதனால் பங்குச் சந்தையில் கிங்பிஷர் ஏர்லைன்ஸின் மதிப்புகள் உயர்ந்திருந்தன. ஆனால் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இதனை மறுத்துவிட்டது.
இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகளை எதிஹாட் ஏர்வேஸ் வாங்கப் போவதாக தற்போது தகவல்கள் பரவியுள்ளன. இதனால் இன்று காலை பங்குச் சந்தையில் ஜெட் ஏர்வேஸ் பங்குகள் 4.7% அதிகரித்திருந்தது. அதே நேரத்தில் கிங்பிஷர் நிறுவனத்தின் பங்குகள் இன்று சரிவை சந்தித்தன.
இருப்பினும் எதிஹாட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்கள் இது பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
Jet jumps on Etihad deal hope; Kingfisher shares fall | ஜெட் ஏர்வேஸ் பங்குகளை வாங்குகிறது எதிஹாட் ஏர்வேஸ்?
Story first published: Monday, December 17, 2012, 14:45 [IST]