சென்னை: சென்னை தீவுத்திடலில் இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி 8 நாட்கள் தாமதமாக தொடங்கியுள்ளது.
சென்னை தீவுத்திடலில் 39-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி தொடக்க விழா நேற்று நடந்தது. தமிழக சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சர் வளர்மதி, சுற்றுலா துறை அமைச்சர் கோகுல இந்திரா, சென்னை மேயர் சைதை துரைசாமி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
தாமதமாக தொடக்கம்
புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையை கழிப்பதற்காக ஆண்டு தோறும் அரசு பொருட்காட்சி டிசம்பர் 2-வது வாரத்தில் தொடங்கி 72 நாட்கள் நடக்கும். ஆனால் தற்போது அரசு பொருட்காட்சியை தொடங்க உரிய காலத்தில் தொடங்க உத்தரவிட்டும் சுமார் 8 நாட்கள் காலதாமதமாக பொருட்காட்சி தொடங்கியுள்ளது.
பொருட்காட்சி இந்த ஆண்டு 8 நாட்கள் தொடங்குவதற்கு காலதாமதமாகி உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் ஆண்டு இறுதி விடுமுறை நாட்களை தவறவிட்டுவிட்டதால் அரங்குகள் அமைத்துள்ள வர்த்தக நிறுவனத்தினர் வருத்தமடைந்துள்ளனர்.
46 அரங்குகள்
46 அரங்குகளுடன் 70 நாட்கள் நடக்க உள்ள பொருட்காட்சியில் அரங்குகள் அமைக்கும் பணி தற்போது முழுமை பெறவில்லை என்பதால் வரும் சனிக்கிழமை வரை பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கு பிறகு பெரியவர்களுக்கு ரூ.15, சிறுவர்களுக்கு ரூ.10, மாணவர்களுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணியிலிருந்து இரவு 10 மணி வரையிலும், மற்ற நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சி திறந்திருக்கும். அறநிலையத்துறை சார்பில் முக்கிய கோவில்களின் பிரசாதங்களும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

போயஸ்கார்டனே இனி நம்ம ஏரியா தான்!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பக்கா பிளான்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications