கொழும்பு: இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐஓசி) 5ஆயிரம் டன் டீசல் தரமற்றது எனக் கூறி திருப்பி அனுப்பி இருக்கிறது இலங்கை.
இலங்கையில் ஐ.ஓ.சி. சார்பில் பெட்ரோல் பங்குகள் இயங்கி வருகின்றன. இவற்றுக்கான டீசல் இலங்கை பெட்ரோலிய சேமிப்பு நிறுவனத்தின் கிடங்குகளில் சேமிக்கப்படுவது வழக்கம். அண்மையில் இந்த கிடங்குக்கு கொண்டுவரப்பட்ட ஐ.ஓ.சிக்கான டீசலை பரிசோதித்த இலங்கை அரசு நிறுவனம் தரமற்றத்து எனக் கூறி பெற மறுத்துவிட்டது.
இதனால் சுமார் 5 ஆயிரம் டன் டீசல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.ஓ.சி.யின் இலங்கை தலைவர் டக்வாவே, இலங்கை நிராகரித்திருக்கும் டீசல் சிங்கப்பூரில் இருந்து கொண்டுவரப்பட்டது என்றார்.
இந்திய நிறுவனத்தின் டீசல் உண்மையிலேயே தரமற்றதா? அல்லது அரசியல் காரணங்களுக்காக இலங்கை நிராகரித்தா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.