ரிலையன்ஸை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் அதிக மதிப்புள்ள நிறுவனமான டிசிஎஸ்

By Siva
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சந்தை மதிப்பில் ரிலையன்ஸை பின்னுக்குத் தள்ளி நம்பர் 1 இடத்தைப் பிடித்த டிசிஎஸ்
மும்பை: இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் அதிக மதிப்புள்ள நிறுவனமாக இருந்த ரிலையன்ஸை பின்னுக்குத் தள்ளி அந்த இடத்தைப் பிடித்துள்ளது ஐடி நிறுவனமான டிசிஎஸ்.

இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் அதிக மதிப்புள்ள நிறுவனமாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் இருந்து வந்தது. இந்நிலையில் ஐடி நிறுவனமான டிசிஎஸ்ஸின் சந்தை மதிப்பு ரூ.2,83,209 கோடியாக அதிகரித்துள்ளது. இது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் சந்தை மதிப்பை விட ரூ. 6,523 கோடி அதிகம். ரிலையன்ஸின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 2,76,686 கோடி ஆகும். இதையடுத்து இந்தியாவின் அதிக மதிப்புள்ள நிறுவனமாக டிசிஎஸ் ஆகியுள்ளது.

டிசிஎஸ் பங்குகளின் விலை 1.15 சதவீதம் அதிகரித்ததே இந்த மதிப்பு கூடுதலுக்கு காரணம். அதே சமயம் ரிலையன்ஸின் பங்குகள் 2.63 சதவீதம் குறைந்துள்ளது.

ரூ. 2,75,187 கோடி சந்தை மதிப்புள்ள ஓஎன்ஜிசி மூன்றாவது இடத்திலும், ரூ.2,36,855 கோடி மதிப்புடன் ஐடிசி நான்காவது இடத்திலும், ரூ. 2,21,704 கோடி மதிப்புடன் கோல் இந்தியா 5வது இடத்திலும் உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS overtakes RIL to become India's most valued company | சந்தை மதிப்பில் ரிலையன்ஸை பின்னுக்குத் தள்ளி நம்பர் 1 இடத்தைப் பிடித்த டிசிஎஸ்

TCS surpassed Reliance Industries to become the country's most valued company as the IT major's market capitalisation soared to over Rs 2.83 lakh crore on the back of a spurt in its share price.
Story first published: Wednesday, February 20, 2013, 12:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X