
2013-2014ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் வரும் 28ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதால் கவலையில் இருக்கும் மக்கள் இந்த பட்ஜெட்டில் தங்களுக்கு நிம்மதி அளிக்கும் அறிவிப்புகள் இருக்காதா என்று பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த பட்ஜெட்டில் மக்களின் எதிர்பார்ப்பு குறித்து அஸ்ஸோசேம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. அதன்படி மக்களின் எதிர்பார்ப்புகளைப் பார்ப்போம்.
மாதச் சம்பளம் வாங்குவோர்:
மாதச் சம்பளம் வாங்குவோர் வருமான வரி உச்ச வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பெண்களுக்கான வருமான வரி உச்ச வரம்பு ரூ.3.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஹெல்த்கேர்:
மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுப்போர் அதிகபட்சமாக ரூ.15,000க்கு வரி விலக்கு பெற முடியும். இந்த தொகையை ரூ.15,000ல் இருந்து ரூ.50,000க உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
போக்குவரத்து:
ஒவ்வொரு ஊழியரின் சம்பளத்தில் உள்ள பயணப்படியில் அதிகபட்சமாக மாதம் ரூ.800க்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. டீசல், பெட்ரோல் விலை அதிகரித்துள்ளதால் இந்த தொகையை ரூ.3,000க உயர்த்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வீட்டு கடன்:
வீட்டு மனை மற்றும் வீடுகளின் விலை பல மடங்காக உயர்ந்துவிட்டது. வீட்டு கடன் தொகையும் அதற்கேற்ப அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த 2001ம் ஆண்டில் இருந்து வீட்டு கடன் மீது அதிகபட்சமாக ரூ.1,50,000க்கு மட்டுமே வரி விலக்கு பெற முடிகிறது. இந்த தொகையை ரூ.2,50,000க உயர்த்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடுகள்:
வருமான வரி சட்டம் 80 சி பிரிவின் கீழ் சில முதலீடுகளுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்திற்கு வருமான வரி விலக்கு பெறலாம். இந்த தொகையை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications