இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தனது நிதிய கொள்கையை மார்ச் 19ம் தேதியன்று மறுபரிசீலனை செய்ய இருக்கின்றது. அப்போது அது தனது வட்டி விகிதங்களை குறைக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
இது வங்கிகள் தனது வைப்பு தொகை விகிதங்களை குறைக்க வழிவகுக்கும். அவசியமில்லையென்றாலும், வட்டி விகிதங்கள் வீழ்ச்சி அடைவதற்க்கு முன்பதாக நான்கு வைப்பு தொகை மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் பரிசீலனை செய்ய வேண்டும்.
கேடிடிஎப்சி:
கேரளா போக்குவரத்து மேம்பாட்டு நிதிக்கழகம் கேரளா அரசாங்கத்தினால் நடத்தப்படும் ஒரு ஸ்தாபனம். ஆகையால் தங்களின் வைப்பு தொகை பாதுகாப்பதானதாக இருக்கும். இரண்டாவதாக ஒரு மூன்றாண்டு வைப்பு தொகைக்கான வட்டி விகிதம் 10.5 சதவீதம். இது மற்ற வங்கிகள் வழங்கி வரும் வட்டி விகிதத்தை விட அதிகம். எனவே பாதுகாப்பு மற்றும் வருமானம் கிடைக்கும் என்பதால் இதில் செய்யப்படும் வைப்பு தொகை அர்த்தமுள்ளதாக இருக்கும்.
ஹட்கோ:
வீட்டு வசதி மற்றும் நகர்புர வளர்ச்சி கழகம் 9.7 சதவீதம் வட்டியை வழங்குகிறது. இதுவும் அரசுக்கு சொந்தமான நிறுவனம் என்பதால் போதுமானதை விட அதிக பாதுகாப்பு உள்ளது. மேலும் இதன் வட்டி விகிதம் மற்ற வங்கிகள் வழங்குவதை காட்டிலும் அதிகம்.
கத்தோலிக்க சிரியன் வங்கி:
ஒன்று முதல் இரண்டு வருட வைப்பு தொகைக்கு கத்தோலிக்க சிரியன் வங்கி வழங்கும் வட்டி 9.65 சதவீதம். உற்று நோக்கினால் வட்டி விகிதமானது குறுகிய மற்றும் நடுத்தர இடைவெளியில் குறைய கூடிய சாத்தியக்கூறு இருப்பதினால் 2 வருடங்கள் வைப்பு தொகைக்கு இது ஒரு நல்ல வட்டி விகிதமாகும்.
மஹிந்திரா நிதி:
மஹிந்திரா நிதி தனது மூன்று வருட நிரந்தர வைப்பு நிதிக்கு 10 சதவீதம் வட்டி வழங்குகிறது. இந்த நிரந்தர வைப்பு நிதியானது கிரைசில் மதிப்பீட்டின் படி உயர்ந்தபட்ச பாதுகாப்பான ‘எப்ஏஏஏ' வை பெற்றுள்ளது. எந்த ஒரு கட்டத்திலும் இந்நிறுவனம் ஒரு பாரம்பரியத்தை பெற்றுள்ளது. மேலும், மஹிந்திரா குழுமத்தின் ஒரு அங்கமாக இருப்பதால் பாதுகாப்பும் மிக மிக அதிகம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications