
சர்க்கரை தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதன்படி, வெளிச்சந்தையில் எவ்வளவு சர்க்கரையை விற்கலாம் என்று மத்திய அரசுதான் நிர்ணயித்து வந்தது. இருப்பினும் சர்க்கரை ஆலைகள் தாங்கள் உற்பத்தி செய்யும் லெவி சர்க்கரையில் 10%-த்தை மத்திய அரசுக்கு கிலோவுக்கு ரூ.20 என்ற நிர்ணயிக்கப்பட்ட விலையில் விற்க வேண்டும். அந்த சர்க்கரையைத்தான் ரேசன் கடைகளுக்கு மத்திய அரசு மானிய விலையில் விநியோகித்து வருகிறது. இதற்கிடையே, சர்க்கரை ஆலைகள் மீதான இந்த கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சி.ரங்கராஜன் தலைமையிலான குழு பரிந்துரை செய்தது.
அமைச்சர்கள் எதிர்ப்பு
இந்நிலையில பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சி.ரங்கராஜன் குழுவின் பரிந்துரைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. சர்க்கரை மீதான கட்டுப்பாட்டை தளர்த்தினால் பணவீக்கம் உயரும் என்றும் பொது வினியோக திட்டம் பாதிக்கப்படும் என்றும் மத்திய-மாநில அரசு உறவுகள் சீர்குலையும் என்றும் சில மத்திய அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் சர்க்கரை ஆலைகள் மீதான கட்டுப்பாட்டை நீக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முடிவு குறித்து மத்திய உணவுத்துறை அமைச்சர் கே.வி.தாமஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், சர்க்கரை ஆலைகள் இனிமேல் தாங்கள் உற்பத்தி செய்யும் சர்க்கரை முழுவதையும் வெளிச்சந்தையில் விற்கலாம். ரேசன் கடைகளுக்கு வினியோகிக்க குறைந்த விலையில் மத்திய அரசுக்கு விற்க வேண்டியது இல்லை. இதனால் சர்க்கரை ஆலைகளுக்கு ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி கிடைக்கும். சர்க்கரை ஆலைகள் வெளிச்சந்தையில் விற்கும் சர்க்கரையைத்தான் இனிமேல் மாநில அரசுகள் கொள்முதல் செய்ய வேண்டி இருக்கும். அப்படி கொள்முதல் செய்யும் சர்க்கரையை ரேசன் கடைகளில் தற்போதைய ரூ.13.50 விலையிலேயே வழங்குவார்கள். எனவே, சர்க்கரை விலை உயராது என்றார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications