மும்பை: இகாத்பூரியில் உள்ள மஹிந்திரா அன்ட் மஹிந்திரா தொழிற்சாலையில் ஊழியர்கள் இன்று 3வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் உள்ள இகாத்பூரியில் மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனத்தின் வாகன உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. தொழிலாளர் சங்கத் தலைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து நிர்வாகம், ஊழியர் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததால் ஊழியர்கள் இன்று 3வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சஸ்பெண்ட் செய்யப்பட்ட தங்கள் தலைவரை மீண்டும் பணியில் அமர்த்தும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.