
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறுகையில்,
ஆதார் அட்டையை வங்கிக் கணக்குடன் இணைப்பது என்பது நேரடி மானியத் தொகை திட்டத்தின் ஒரு பகுதியாகும். அரசு மானியம் தொடர்ந்து பெற வரும் ஜூன் தொடங்கி மூன்று மாதத்திற்குள் அனைவரும் ஆதார் அட்டையைப் பெற்று அதை வங்கிக் கணக்குடன் இணைக்க வேண்டும். மானிய விலையில் முதல் கேஸ் சிலிண்டரை பதிவு செய்யும் போதே அதற்கான மானியத் தொகையும் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கை சென்றடையும். அதுவும் சிலிண்டர் வாங்குவதற்கு முன்கூட்டியே மானியத் தொகை மக்களின் வங்கிக் கணக்கில் இருக்கும். இப்படிச் செய்வதன் மூலம் சந்தை விலையில் கேஸ் சிலிண்டர் பெறும் சுமையை ஆரம்பத்தில் இருந்தே அகற்றலாம்.
பதிவு செய்த கேஸ் சிலிண்டர் கிடைத்த உடனே அடுத்த சிலிண்டருக்கான மானியத் தொகை வங்கிக் கணக்கைச் சென்றடையும். அடுத்த சிலிண்டரை சந்தை விலையில் பெற்றுக் கொள்ள இது ஏதுவாக இருக்கும் என்றார்.
ஆந்திர பிரதேசம், தாமன் அன்ட் தையு, கர்நாடகா, மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், கேரளா, பஞ்சாப், கோவா, புதுச்சேரி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து 20 மாவட்டங்கள் இதில் அடங்கும். இந்த 20 மாவட்டங்களில் சுமார் 89 சதவிகித மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் கிட்டத்தட்ட பாதி ஆதார் அட்டைகள் மட்டுமே வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த 20மாவட்டங்களில் 85 லட்சம் கேஸ் இணைப்பு வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.
ஆதார் அட்டை மற்றும் அதனை வங்கிகளிடம் இணைப்பதின் அவசியம் குறித்து அனைவரும் தெரிந்து வைத்திருத்தல் அவசியம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications