
இயற்கை வளங்களைத் தவறாகப் பயன்படுத்துதல், அபரிவிதமான கழிவுகள் மற்றும் பூச்சுக்கொல்லி மருந்துகளைத் தவறாக் பயன்படுத்துதல் போன்ற குற்றங்களுக்காக, வால்மார்ட் நிறுவனத்தின் மீது ஒரு பொதுநல வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதாவது லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சான் ஃபிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் உள்ள நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்கள், வால்மார்ட் நிறுவனத்திற்கு எதிராக பொதுநல வழஙக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்குகளை விசாரனைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், அமெரிக்காவின் கிளீன் வாட்டர் சட்டத்தின் 6 பிரிவுகளை வால்மார்ட் மீறிய குற்றத்திற்காக, 110 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாக விதித்தனர்.
அதாவது சட்டத்திற்கு புறம்பாக, அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் கிளைகள், அபிரிவிதமான கழிவுகளை கையாளுதல் மற்றும் கழிவுகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கின்றது. தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் அபராதத்தை வால்மார்ட் கட்டிவிடுவதாக உறுதியளித்திருக்கிறது.
தேசிய பூச்சிக்கொல்லிகள், பூஞ்சைகொல்லிகள் மற்றும் எலிக்கொல்லிகள் சட்டத்திற்கு (FIFRA) எதிராக வால்மார்ட் நிறுவனக் கிளைகள் குற்றம் செய்திருக்கின்றன. குறிப்பாக பூச்சிக்கொல்லி, பூஞ்சைக்கொல்லி மற்றும் எலிக்கொல்லி மருந்துகளை வால்மார்ட் முறையாக பாதுகாத்து வைக்கவில்லை மற்றும் முறையாக கையாளவில்லை என்று கூறி அமெரிக்காவில் வாழும் வால்மார்ட் வாடிக்கையாளர்கள் அந்த மருந்துகளை வால்மார்ட் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கின்றனர்.
இதனால் வால்மார்ட் நிறுவனத்தின் எதிராக 3 குற்றப் பிரிவு சட்டங்களுக்கு கீழ் அமெரிக்க நீதித் துறையும், ஒரு சிவில் பிரிவு சட்டத்தின் கீழ் அமெரிக்க சுற்றுப்புற பாதுகாப்பு அமைப்பு (EPA) வழக்கைத் தொடுத்திருக்கின்றன. இந்த குற்றங்களுக்காக வால்மார்ட் தோராயமாக 81.6 மில்லியன் டாலர்களை அபராதமாகச் செலுத்தும் என்று தெரிகிறது.
மேற்சொன்ன வழக்குகளோடு, அதே குற்றங்களுக்காக கலிபோர்னியா மற்றும் மிசௌரி போன்ற மாநிலங்களில் பதிவான வழக்குகளுக்கும் சேர்த்து, வால்மார்ட் 110 மில்லியன் அமெரிக்க டாலர்களை அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க நிதித்துறை தெரிவித்திருக்கிறது.
கழிவுகளை கையாள ஒரு முறையான திட்டத்தை வால்மார்ட் வைத்திருக்கவில்லை. அதுபோல் அந்த கழிவகளை முறையாகக் கையாள தனது ஊழியர்களுக்க சிறப்பு பயிற்சியையும் வால்மார்ட் அளிக்கவில்லை என்று அமெரிக்க அரசு அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அதனால் அந்த கழிவுகள் முனிசிபால் குப்பைத் தொட்டிகளில் அளவுக்கு அதிகமாக பாதுகாப்பின்றி கொட்டப்பட்டன. அதுபோல் நீர்க் கழிவுகள், அரசு கழிவுக் குழாய்களில் பாதுகாப்பின்றி ஊற்றப்பட்டன என்று அந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
அமெரிக்காவில் மட்டும் 4000 கிளைகளை வால்மார்ட் வைத்திருக்கிறது. எரியக்கூடிய, பின்விளைவுகளை எற்படுத்தக்கூடிய பல பொருள்களை விற்பனை செய்கிறது.
சட்டக் கெடுபிடி அதிகமாக இருக்கும் அமெரிக்காவிலேயே வால்மார்ட் தனது வேலையைக் காட்டுகிறது என்றால், சட்டங்களில் அதிகமான ஓட்டைகளைக் கொண்டிருக்கும் இந்தியாவிற்கு வரும் வால்மார் எப்படிப்பட்ட ஆட்டம் ஆடப் போகிறதோ தெரியவில்லை.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications