
மேலும் அவர் கூறும் போது, பல்வேறுபட்ட துறைகளில் செய்யப்படும் நேரடி அன்னிய முதலீடுகளின் அளவு விரைவில் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் இது சம்பந்தமான கூட்டம் வரும் ஜூலை 2 அல்லது மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
"மிகவும் வேகமான பொருளாதார வளர்ச்சியை பெற்றுவரும் நாடுகளில் சீனாவிற்கு அடுத்து இந்தியா இருக்கிறது. எனவே இந்தியா தனது மந்தமான பொருளாதார நிலையிலிருந்து மிக விரைவில் மீண்டு எழுந்துவிடும். எனவே முதலீட்டாளர்கள், தங்கள் முதலீட்டுக்கு இந்தியா ஒரு பாதுகாப்பான நாடு என்பதை மிக விரைவில் புரிந்து கொள்வார்கள். தற்போது நிலவும் இந்த மந்த நிலை மிக விரைவில் சரியாகிவிடும். எனவே இந்திய பொருளாதார நிலையைப் பற்றி எவரும் எதிர்மறையான சிந்தனைகளைக் கொண்டிருக்கத் தேவையில்லை" என்று சிதம்பரம் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது சம்பந்தமான கேள்விக்கு பதில் அளிக்கும் போது, அமெரிக்க பெடரல் ரிசர்வ் சேர்மன் பென் பெர்னான்கே கூறியது "இரண்டு வாரங்களுக்குள், இந்தியாவிலிருந்து 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு பணம் வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் ஆகிவிட்டது" என்ற தகவல் மிகத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்திய ரூபாயின் மதிப்பு மிக நிலையாக இருக்கிறது. அதிக அளவிலான பணம் இந்தியாவிற்கு வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரையில் ஏறக்குறைய 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு இந்தியாவிற்குள் பணம் வந்திருக்கிறது. ஆனால் பெர்னன்கே கூறியிருக்கும் "இரண்டு வாரங்களுக்குள் இந்தியாவிலிருந்து 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் ஆகியிருக்கிறது" என்று செய்தி மிகவும் துரதிர்ஷடமானது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications