இந்தியாவில் மிகப் பரந்த அளவில், தொலைத் தொடர்பு சேவையை பாரதி ஏர்டெல் நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 2003 முதல் 2005 வரையிலான ஆண்டுகளுக்கு இடையில், 13 சேவை பகுதிகளில், ரோமிங் விதிமுறைகளை எக்குத்தப்பாக மீறியிருக்கிறது. அதற்காக அந்த நிறுவனத்திற்கு ரூ.650 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்த அபராதத்திற்கு இந்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் ஒப்புதல் அளித்து உறுதி செய்திருக்கிறார்.
இது சம்பந்தமாக தொலைத் தொடர்பு துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறும் போது, எஸ்எல்டி (சப்ஸ்க்ரைபர் லோக்கல் டயலிங்) சம்பந்தமாக, ஏர்டெல் நிறுவனத்திற்கு ரூ.650 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்பதற்கு கபில் சிபல் ஒப்புதல் அளித்து, அதை உறுதிப்படுத்தி இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2003 - 2005 ஆண்டு வரை, தொலைத் தொடர்புத் துறை நிறுத்தச் சொன்ன பிறகும்கூட, ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அழைப்புகளை லோக்கல் கால்களாக (எஸ்எல்டி) பயன்படுத்தி வந்திருக்கிறது. இதை தொலைத் தொடர்புத் துறையச் சேர்ந்த ஒரு சிறப்புக் குழு கண்டுபிடித்து, தொலைத் தொடர்புத் துறையிடம் தெரிவித்திருக்கிறது.
ஏர்டெல் நிறுவனத்தின் இந்த ஏமாற்று செயலினால், அரசுக்கும், பாரத் சஞ்சர் நிகாம் லிமிடட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்திற்கும் அதிகமான அளவில் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அந்த குழு தெரிவித்திருக்கிறது. எனவே இந்த வார இறுதியில், ரூ.650 கோடி தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் என்பதற்கான முறையான நோட்டீஸ் ஒன்றை, ஏர்டெல் நிறுவனத்திற்கு அனுப்பப்படும் என்று தெரிகிறது.
ஆனால் இது சம்பந்தமாக ஏர்டெல் நிறுவனம் இன்னும் வாய் திறக்கவில்லை.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications