உலகத்தின் பொருளாதார மந்த நிலையில் எஃகு உற்பத்தித் துறையும் சிக்கி உள்ளது, இதனால் ஸ்டெம்கோர் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் அந்நிறுவனம் தனது சொத்துக்களை விற்க திட்டமிட்டுள்ளது. இதில் ஒரிசாவில் இருக்கும் இரும்பு தாது சுரங்கமும் அடக்கம். இந்த சொத்திக்களை விற்பதன் முலம் இந்நிறுவனத்திற்கு சுமார் 800 மில்லியன் டாலர் கிடைக்கும்.
ஸ்டெம்கோர் நிறுவனம் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. மேலும் இந்நிறுவனம் வங்கிகளுக்கு செலுத்த தவறிய கடன் தொகை மட்டும் சுமார் ஒரு பில்லியன் டாலர், என ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.
தற்போது உள்ள டாடா ஸ்டீல் நிறுவனம் 2007 ஆம் ஆண்டு பிரிட்டனின் எஃகு உற்பத்தி நிறுவனமான கோரஸை கையகப்படுத்தியது ஆகும். மேலும் இந்த சுரங்கத்திற்காக இந்தியாவில் உள்ள ஜின்டல் ஸ்டில் நிறுவனம் கடும் போட்டியாக டாடா ஸ்டீலும் விளங்குகிறது. ஸ்டெம்கோர் நிறுவனத்திற்கு கடன்களை திருப்பி செலுத்த வங்கிகள் செப்டம்பர் 16 வரை காலகெடு விதித்துள்ளது.