சென்னை: உங்கள் மொபைல் நீண்ட காலமாக ஆஃப் செய்யப்பட்டுள்ளதா?? ஆப்படியானால் உங்கள் வங்கி கணக்கை கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும்.
இந்த திருட்டு பசங்க தொல்ல தங்க முடியலப்பா!!. இப்பொழுது டுப்ளிகேட் சிம் கார்டின் முலம், வங்கிளிடம் இருந்து ஒன் டைம் பாஸ்வேர்டுகளை பதிவு செய்யப்பட்ட மொபைல் போன்களின் முலம் பெற்று வங்கி கணக்குகளை பயன்படுத்துகின்றனர். இதனால் பல குற்றங்கள் நடைபெறுவதாக வங்கிளும், பொது மக்களும் தெரிவிக்கின்றனர்.
சமிபத்தில், இதே முறையில் ஒருவர் வங்கி கணக்குகளை பார்க்கும் போது 2.5 இலட்ச ரூபாய் பரிபோனது தெரியவந்துள்ளது. சமந்தப்பட்ட வங்கியிடம் விசாரிக்கும் போது, பரிமாற்றங்கான ஒன் டைம் பாஸ்வேர்டு எண்ணை பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பபட்டதாக கூறினர்.
மேலும் அவர்கள் செய்த அனைத்து பரிமாற்றங்களுமே டுப்ளிகேட் சிம் கார்டு முலமே செய்யப்பட்டது என மேற்படி விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அந்த சிம் கார்டுகள் அனைத்தும் சட்டவிரோதமாக பெறப்பட்டவையாகும்.
அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்
இந்த மொபைல் மற்றும் இன்டர்நெட் பாங்கிங் யுகத்தில், சைபர் தளத்தில் புதிதாகவும் மற்றும் தந்திரமான முறையில் பல மோசடிகள் நடைபெறுவதாக ஆர்பிஐ மற்றும் வங்கி புகார் தரவுகளில் தெரிகிறது.
கடும் நடவடிக்கை
"ஒன் டைம் பாஸ்வேர்டுகளின் மூலம் வங்கி கணக்குகளை முறையற்ற வகையில் சில மோசடி கும்பல் ஈடுபடுவதாக புகார்கள் வருகிறது. இதுபோன்ற மோசடி நிகழ்வுகளை மிகுந்த அக்கறையுடன் கவனித்து வருகிறோம்" என்று ஆந்திர பிரதேசதின், ரிசர்வ் வங்கி மற்றும் வங்கி புகார் துறை, தலைமை பொது மேலாளர், கிருஷ்ணா மோகன் கூறினார்.
வங்கி மற்றும் TRAI
மேலும் அவர் "தொலை தொடர்பு ஆபரேட்டர்கள் வாடிக்கையாளர் (KYC) நெறிகள் மீறி இத்தகைய குற்றங்களை தடுக்க முடியும். இது வங்கிகள் மற்றும் TRAI உடன் இனைந்து செயல்படுவதன் முலம் செயல்படுத்த முடியும்" என்று தெரிவித்தார்.
தொலை தொடர்பு ஆபரேட்டர்கள்
மேலும் சிம் கார்டு மற்றும் டுப்ளிகேட் சிம்களை வழங்கும் முன் அனைத்து விதிகளையும் பின்பற்றுவது மட்டும் அல்லாமல் கேஒய்சி (KYC) விதிகளையும் பின்பற்றுவதாக தொலை தொடர்பு ஆபரேட்டர்கள் கூறுகின்றனர்.
யூனிநார்
"நாங்கள் முழுமையாக தொலை தொடர்பு வழங்கப்பட்ட விதிமுறைகளை செயல்படுத்துகிறோம். எந்த ஒரு வாடிக்கையாளர்களுக்கும் விதிமுறைகளை மீறி சிம் கார்டுகளை வழங்குவதில்லை." என்று ஆந்திர பிரதேச வட்டத்தின், யூனிநார் வர்த்தக தலைவர் சதீஷ் கண்ணன் தெரிவித்தார்.
பற்று / கடன் அட்டைகளின் குளோனிங்
மொபைல் மற்றும் இன்டர்நெட் பாங்கிங் மட்டும் அல்லாமல் பற்று / கடன் அட்டைகளை குளோனிங் செய்வதிலும் இந்த மோசடி கும்பல் இரங்கிவிட்டனர். இந்த குளோனிங் முறையில் பற்று / கடன் அட்டைகளின் பின் எண்களை (PIN) தெரிந்து கொள்ள பல வழிகள் இருக்கிறதாம்.
ஆன்லைன் வைரஸ்
"பற்று / கடன் அட்டைகளின் விவரங்களை ஆன்லைன் முலமாகவும் பெற முடியும். நமது கணினியில் கண்டறியப்படாத சிறிய வைரஸ் இருக்கலாம், அதை கொண்டு இத்தகைய மோசடி கும்பல் தகவல்களை பெறுகின்றனர்." என்று வங்கிகள் தெரிவிக்கின்றது.
இரண்டு அடுக்கு பாதுகாப்பு
வரும் நவம்பர் 1 முதல் ஆர்பிஐயின் நடவடிக்கையின் முலம் அனைத்து அட்டை சார்ந்த பரிமாற்றங்கள், இரண்டு அடுக்கு பாதுகாப்பு (Doulbe Pin or Password) அளிக்கப்படும் என்று தெரிகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications