புதிய ஆர்பிஐ கவர்னரான ரகுராம் ராஜன் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதிய ஆர்பிஐ கவர்னரான ரகுராம் ராஜன் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள்!!!
ஆர்பிஐயின் புதிய கவர்னரான திரு.ரகுராம் ராஜன், வீழ்ந்து கொண்டிருக்கும் ரூபாய், அதிகரித்துக் கொண்டிருக்கும் நடப்பு கணக்கு பற்றாக்குறை (சிஏடி) மற்றும் அமெரிக்கா கடனீட்டுப் பத்திரங்கள் வாங்குவதை குறைக்கும் பட்சத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் போன்ற கடும் சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்று பிடிஐ தகவலறிக்கை கூறுகிறது.

சுமார் ஒரு வருட காலமாக நிதி அமைச்சகத்தில் முதன்மை பொருளாதார ஆலோசகராக பணியாற்றி வந்துள்ள 50 வயதாகும் திரு ராஜன், திரு துவ்வுரி சுப்பாராவ் அவர்களுக்கு பதிலாக செப்டம்பர் 4ஆம் தேதியன்று கவர்னராக பொறுப்பு ஏற்றார்.

தொழில்துறை மந்தநிலை, ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி, விலைவாசி ஏற்றம் மற்றும் வரலாறு காணாத அளவில் உயர்ந்து காணப்படும் சிஏடி போன்ற சவால்களுடன் இந்தியப் பொருளாதாரம் முட்டி மோதிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் மத்திய வங்கியின் 23-ஆவது தலைவராக திரு ராஜனின் நியனம் நிகழ்ந்துள்ளது.

மீடியா தகவல்களின் படி, தன் வெளிப்படையான கருத்துக்களுக்கு பெயர் போன திரு ராஜன், 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய நிதிப் பற்றாக்குறையை முன்கூட்டியே கணித்ததற்காக பெரிதும் பாராட்டப்பட்டதாகவும் தெரிகிறது. 2005 ஆம் ஆண்டில், ராஜன் அவர்கள் நிதித் துறையைச் சாடி ஆற்றிய உரையில் நிதி சார்ந்த பேரழிவு ஒன்று கூடிய விரைவில் வரக்கூடும் என்று எச்சரித்திருக்கிறார்.

பொறுத்திருந்து பார்ப்போம் !!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

New RBI Governor Raghuram Rajan to face tough times with rising CAD and falling rupee

Raghuram Rajan has his job cut out as the new RBI Governor as he will have to deal with declining value of Rupee, widening Current Account Deficit (CAD) and the impact of likely tapering of US bond purchases
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X