ஐடிபிஐ வங்கியின் ரூ.3000 கோடி அளவில் தயராகும் புதிய கடன் திட்டம்!!!

மும்பை: ஐடிபிஐ வங்கி தேர்ச்சிபெற்ற அமைப்புசார் அமர்வு முறையில் (QIP) ரூபாய் 1,200 கோடி பங்கு முதலீட்டை திரட்டவுள்ளது.

ஐடிபிஐ வங்கியின் தேவையான ரூபாய் 3000 கோடியில் ரூபாய் 1800 கோடி அரசிடமிருந்தும், மீதத்தொகை தேர்ச்சிபெற்ற அமைப்புசார் அமர்வு முறை வாயிலாகவும் பெறப்படும் என அவ்வங்கியின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான எம்.எஸ். ராகவன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

வருடாந்திர வங்கி மாநாட்டில் (Bancon) எம்.எஸ். ராகவன் பேசுகையில், "முன்னோக்கப்பட்ட மொத்த தொகையான ரூ.3,000 கோடியில், ரூபாய் 1,800 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது, மீதம் க்யூஐபி (QIP) திட்டத்தின் மூலம் சுமார் 1,200 கோடி திரட்டப்படும்" என்றார். மத்திய அரசின் ரூபாய் 14,000 கோடிக்கான வங்கிகள் முதலீட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக நடப்பாண்டில் அரசு 1,800 கோடி ருபாய் கடன் தொகையை இவ்வங்கிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஐடிபிஐ வங்கியின் ரூ.3000 கோடி அளவில் தயராகும் புதிய கடன் திட்டம்!!!

ஐடிபிஐ வங்கி இரண்டாம் நிலை முதலீட்டை பரிசீலிக்குமா என்ற கேள்விக்கு இவ்விஷயத்தை பொறுத்த வரை தற்போது இவ்வங்கி தாராளமான நிலைமையில் உள்ளதாகவும் அடுத்த இரண்டாண்டுக்கு எந்த முதலையும் திரட்டப்போவதில்லை எனவும் திரு ராகவன் தெரிவித்தார்.

ஐடிபிஐ வங்கி இரண்டாம் நிலை முதலீட்டை பரிசீலிக்குமா என்ற கேள்விக்கு, இவ்விஷயத்தை பொறுத்த வரை தற்போது ஐடிபிஐ வங்கி தாராள நிலைமையில் உள்ளதாகவும் அடுத்த இரண்டாண்டுக்கு எந்த முதலிட்டையும் திரட்டப்போவதில்லை எனவும் திரு ராகவன் தெரிவித்தார்.

சமீபத்தில் தலைவராகப் பதவியேற்ற திரு ராகவன், முன்னுரிமை துறையின் கடன் இலக்கை அடைவதன் மூலம் நல்ல லாபங்களை பெறுவதே தன் முக்கிய குறிக்கோள் என தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+