ஆப்பிள், சாம்சங் நிறுவனத்தின் காப்புரிமை வழக்கு முடிவுக்கு வந்தது!!! 290 மில்லயன் டாலர் அபராதம்...

சான் ஜோஸ்: ஐபோன் புகழ் ஆப்பிள் நிறுவனம், சாம்சங் நிறுவனத்திற்கு எதிராக தொடந்த காப்புரிமை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவன வாதங்களை கேட்ட நிதிபதி, ஆப்பிள் நிறுவனத்திற்கு இழப்பீடாக சுமார் 290 மில்லியன் டாலர் வழங்க சாம்சங் நிறுவனத்திற்கு நிதிபதி உத்தரவிட்டார்.

அமெரிக்காவின் சான் ஜோஸ் மாகன நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் 8 பேர் கொண்ட நடுவர் குழுவின் ஒரு ஆலோசனையின் பின்பு இத்திர்ப்பு வழங்கப்பட்டது.

செல்லாது.. செல்லாது.. 290 மில்லயன் டாலர் அபராதம் வருத்தத்தில் சாம்சங்...

2012ஆம் ஆண்டு இவ்வழக்கை விசாரித்த நிதிபதி சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்புகளில் சட்டத்திற்கு புறம்பாக ஆப்பிள் நிறுவனத்தின் படைப்புகளை உபயோகித்தற்காக சுமார் 1.05 பில்லியன் டாலர் நஷ்டஈடு அளிக்க சாம்சங் நிறுவனத்திற்கு உத்தரவு அளித்தது. இவ்வழக்கை மேலும் விசாரித்த லுசி கோ இழப்பீட்டு தொகையை 450 மில்லியன் டாலர் அளவு குறைத்தார். இதனால் பல குழப்பங்கள் விளைந்தது.

கடந்த இரு வாரமாக நடந்த வழக்கு விசாரனையில் நஷ்டஈடாக ஆப்பிள் 450 மில்லியன் டாலர் கோரியும், சாம்சங் 52 மில்லியன் டாலர் மட்டுமே தர இயலும் என வாதாடி வந்தது. இந்நிலையில் இன்று அளித்த வழக்கின் தீர்ப்பை பார்க்கும் பொழுது திர்ப்பு ஆப்பிள் நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்து என்றே கூறலாம். மேலும் இத்திர்ப்பை எதிர்த்து சாம்சங் மேல் முறையீடு செய்த முடிவு செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+