பெங்களூரு: உலகப் புகழ் ஸ்டார்பக்ஸ் காஃபி நிறுவனம் டாடா நிறுவனத்துடன் இனைந்து இந்தியாவில் தனது வணிகத்தை 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது. துவக்கத்தில் மும்பை, டெல்லியில் மட்டும் இந்த இணை நிறுவனம் தனது கிளைகளை திறந்தது.
இந்த இரு கிளைகளின் வெற்றியை தொடர்ந்து இந்தியாவின் மேற்கு பகுதியில் பல கிளைகளை இந்நிறுவனம் திறந்தது. மேலும் பல புதிய வகையான காஃபி வகையை அறிமுகம் செய்தது.
இதனை தொடர்ந்து இந்நிறுவனம் தனது வர்த்தகத்தை தென் இந்தியாவிலும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு பெங்களூரை தேர்வு செய்துள்ளது. ஐடி துறை, பல வகைப்பட்ட மக்கள், புதிய வர்த்தகம் செய்ய எற்ற இடம், மேலும் பணபுழக்கம் அதிகாமாக இருக்கும் இடம், என்று பல வகையில் ஆய்வுகளுக்கு இந்நிறுவனம் பெங்களூரை தேர்வு செய்துள்ளது.

இதைபற்றி ஸ்டார்பக்ஸ் காஃபி நிறுவனத்திடம் கேட்டபோது "தென் இந்தியாவில் முதல் கிளையை பெங்களூர் கோரமங்களாவில் துவங்க உள்ளோம். இங்கு நாங்கள் உயர் தர காஃபி வகைகள், பானங்கள், புதிய உணவு வகைகளை வாடிக்கையாளர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளோம்" என தெரிவித்தனர்.
இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக 25 கிளைகளை திறந்துள்ளோம், மேலும் பெங்களூரூ அடுத்து தென் இந்தியாவில் பல இடங்களில் திறக்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications