இலங்கை அரசுக்கு சுமார் 38.2 மில்லியன் டாலர் மதிப்பிலான 2,200 பேருந்துகளை இலங்கை போக்குவரத்து வாரியத்திற்காக வாங்க திட்டமிட்டுள்ளது. இதை இந்தியாவின் அசோக் லைலாண்ட்மற்றும் இலங்கையரசின் கூட்டு முயற்சியான லங்கா அசோக் லைலாண்ட் பிஎல்சி நிறுவனத்திடம் வாங்கவுள்ளது.
இதற்காக இலங்கை அரசு லங்கா அசோக் லைலாண்ட் நிறுவனத்திடம் கடன் விற்பனைக்கான பேரத்தில் ஈடுபட்டுள்ளது என அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் குமார வேல்காம கூறியதாக ஊடகங்கள் தெரிவித்தன. இலங்கையரசு போக்குவரத்து வாரியத்திற்கு ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் இலங்கை ரூபாய்களை 5 வருடங்களுக்கு வழங்கும். அதற்கு மேற்பட்ட தொகையை அவ்வாரியம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த ஒப்பந்தமானது பலகாலமாக புதிய வண்டிகள் மற்றும் பராமரிப்புகள் இன்றித் தவிக்கும் அரசின் போக்குவரத்துத் துறையை மேம்படுத்தும் முயற்சியாகும். தற்போது அங்கு சாதாரண மனிதர்களும் விலை அதிகமான தனியார் போக்குவரத்தை நம்பியுள்ள நிலை உள்ளது.
லங்கா அசோக் லைலாண்ட் நிறுவனம் 1982இல் துவங்கப்பட்டு அந்நாட்டின் பல்வேறு கடினமான கால கட்டங்களில் துணையாக நின்றதுடன் அதற்கான அதிகாரபூர்வ அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. அந்நிறுவனத்தின் பேருந்துகளும் சரக்குந்துகளும் சுமார் 60 விழுக்காடு பங்கை பெற்றுள்ளன. இது கடந்த 29 வருடங்களுக்கு முந்தய அளவான 13 விழுக்காட்டை ஒப்பிடுகையில் சற்று ஆறுதல் தரும் செய்தியாகும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications