மும்பை: இந்தியாவின் முதன்மையான தொலைதொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் நிறுவனம் மொபைல் அழைப்பு கட்டணங்களை 10-20 சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளது என்று பங்கு ஆய்வு நிறுவனமான நொமூரா (Nomura) தெரிவித்துள்ளது. 'இது குறித்து பாரதி நிறுவனத்துடன் பேசிய போது இந்த சேவைகளின் பயன்பாடுகள் அதிகமாக உள்ளதால் தற்போதைய அளவிலிருந்து 10-20 சதவிகிதம் உயர்த்த அதிக வாய்ப்புகள் உள்ளது' என்று திட்டவட்டமாக தெரிவித்தது.
ஏர்டெல் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் "இந்தியாவை செயல்பாட்டின் பொறுத்தவரை தற்சமயம் விலையை உயர்த்தும் எண்ணம் எதுவும் இல்லை. ஆனால் தற்போது இருக்கும் தள்ளுபடி திட்டங்களையும் மற்ற சலுகைகளையும் குறைக்க முற்பட்டுள்ளோம்" என்றார்.
இந்நிறுனம் தனது போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களின் அழைப்பு கட்டணங்களை 50 சதவிகிதம் வரை செப்டம்பர் மாதத்தில் உயர்த்தியுள்ளதாக கூறியுள்ளது.
உள்ளுர் மற்றும் வெளியூர் ஏர்டெல் மொபைல்களுக்கான கட்டணம் ஒரு நமிடத்திற்கு 50 பைசாவிலிருந்து 60 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. லேண்ட்லைன் அழைப்புகளுக்கான கட்டணம் 60 பைசாவிலிருந்து 90 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. பாரதி நிறுவனம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்துடன் அண்மையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் சந்தையில் அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் எந்தவிதமான தாக்குதலுக்கும் பயமின்றி, அமைதி-ஒத்துழைப்புடன் இருக்க முடியும் என நொமூரா தெரிவித்தது. பாரதி ஏர்டெல் நிறுவனம், ஆப்ரிக்காவில் அளித்து வரும் தொலைபேசி சேவையில் ஆர்கானிக் அல்லது இன்-ஆர்கானிக் வளர்ச்சி அளவுகளில் சாதகமான செயல்பாடுகள் மூலம் முதன்மையான நிலையை அடைய முடியாத பட்சத்தில் தங்களுடைய சேவையை அங்கே நிறுத்தி விடவும் யோசித்து வருவதாக இந்த ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் தொலைதொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களில் 5ஆம் இடத்திலுள்ள ஏர்டெல், பங்குச்சந்தையில் ஏற்றம் காணவில்லை எனில் பாரதி ஏர்டெல் நிறுவனம் இலங்கையிலிருந்தும் வெளியேறும் என எதிர்பார்ப்பதாக நொமூரா தெரிவித்தது. பாரதி நிறுவனம் எஸ்.எம்.எஸ் சேவை மங்கும் நிலையில் இருப்பதாகவும், அதற்கு காரணம் மொபைல் இன்டர்நெட் சேவை மூலம் கிடைக்கும் வருவாய் எஸ்.எம்.எஸ் சேவையை விட 6 மடங்கு அதிகம் என கணித்துள்ளதாக நொமூரா தெரிவித்தது. ஏர்டெல் நிறுவனத்தின் இன்டர்நெட் சேவையில் அதிகரித்து வரும் வருமானத்தை கணக்கில் கொள்ளும் போது, அது அவர்களின் மொத்த வருவாயில் 10 சதவிகிதமாக உள்ளதாக, நொமூரா தெரிவித்தது. பாரதி ஏர்டெல் நிறுவனம் வரவிருக்கும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தை பற்றி கருத்து கூறவில்லை என்றும் ஆனால் அடுத்த வருடம் ஜனவரி 23ல் தொடங்கும் ஏர்வேவ்ஸ் நிறுவனத்தின் ஏல வேலையில் மும்முரமாக இருப்பதாகவும் நொமூரா தெரிவித்தது. "பாரதி நிறுவனம் ஜனவரி 2014ல் நடைபெறும் ஏலத்தில் பங்கு பெற விரும்பும் என்று நினைக்கிறோம்" என நொமூரா தெரிவித்தது.
உள்ளுர், வெளியூர் அழைப்புகள்
ஏர்டெல்- ரிலையன்ஸ்
பின்வாங்கும் ஏர்டெல்
இலங்கை...
6 மடங்கு லாபம் அதிகரித்தது....
10% லாபம் கொண்ட இன்டர்நெட் சேவை
ஸ்பெக்ட்ரம் ஏலம்
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications