டெல்லி: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய கார், வாங்கிய முதல் ஆண்டிலேயே பல சிக்கல்களை உண்டாக்கியது. இதனால் கடுப்படைந்த வாடிக்கையாளர் வழக்கு தொடுத்தார். இப்புகாரின் அடிப்படையில் நுகர்வோர் அமைப்பு ஒன்று டாடா மோட்டார் நிறுவனத்தை ரூ.1.25 லட்சத்தை நஷ்ட ஈடாக வாகன உரிமையாளருக்கு கொடுக்க வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளது.
புது டெல்லி நுகர்வோர் குறை தீர்க்கும் சங்கத்தினர் இப்புகாரை ஆராய்ந்ததில், இந்த புதிய நான்கு சக்கர வாகனத்தை வாங்கிய அந்த நபருக்கு தரம் குறைந்த காரை விநியோகம் செய்ததால் மகிழ்ச்சியும், மனநிறைவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மூலம் கிட்டவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோளாறு நிறைந்த கார்
வாங்கப்பட்ட காரில் செய்யப்பட்ட மாற்றங்கள் அதாவது இயந்திர கோளாறுகள் மற்றும் இதர பாகங்களின் கோளாறுகள் குறித்த வேலைக்கான அட்டவணையை பார்க்கும் போது தெரிய வந்துள்ளது.
முதல் வருடமே இப்படி!!
இந்த கோளாறுகள் அனைத்தும் காரை வாங்கிய முதல் ஆண்டிலேயே வந்ததும் தெரிய வந்துள்ளது.
டாடா மோட்டார்ஸின் தவறு
இந்த காரில் இன்ஜின் மாற்றப்பட்டும் மற்றும் பல பாகங்களும் மாற்றப்பட்டும், ஒரு புதிய வாகனம் வாங்கி அதன் மூலம் நமக்கு கிடைக்கும் இன்பத்தையும், மன திருப்தியையும் அறவே தர மறுத்து விட்டது டாடா மோட்டார்ஸ். இந்த பழுதுகளை சரி வர கவனிக்காமல் அதன் தரத்தை மதிப்பிடாமல் காரை விநியோகம் செய்துள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இது முற்றிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தவறு.
நஷ்ட ஈடு..
'2013-ஆம் ஆண்டில் இந்த கார் உறுதியான நிலையில் மாற்றி தர வேண்டும் என்பது கடினமான ஒன்று. ஆகையால் இதை கருத்தில் கொண்டு டாடா மோட்டார்ஸ் மீதுள்ள தவறின் அடிப்படையில் நஷ்ட ஈடாக ஒரு லட்சம் ரூபாயும் மற்றும் வழக்கை நடத்தியதற்காக 25,000 ரூபாயும் தரும் படி செய்துள்ளோம்' என்று சி.கே.சதுர்வேதி தலைமையிலான பெஞ்ச் குறிப்பிட்டுள்ளது.
விளக்கம் தர மறுப்பு!!
டெல்லியை சேர்ந்த காலித் ஹாஸ்மி கொடுத்துள்ள புகாரை சாதாரணமாக புறக்ணித்த டாடா மோட்டார் அந்நிறுவனம், 'ஒரு ஆண்டுக்குள் எப்படி இவ்வளவு பிரச்னைகள் அந்த புதிய காரில் வந்தது என்பதற்கும் விளக்கம் தரவில்லை என்பதையும் இந்த சங்கம் கவனித்துள்ளது.
பிரச்சனை!! பிரச்சனை!!
ஹாஸ்மி கொடுத்த புகாரில் இந்த கார் ஜுலை 2004 ஆம் ஆண்டு வாங்கிய வாகனம் என்றும், வாங்கிய முதல் ஆண்டிலேயே இன்ஜின் மற்றும் பல பாகங்களில் கோளாறுகள் ஏற்பட்டதாகவும், இதை மாற்றி அமைத்த போதும் பிரச்சனைகள் சரியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications