டெல்லி: சுவிஸ் வங்கிகளில் சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணம் மீதான, இந்தியாவின் கவனத்தை தீவிரப்படுத்தப்படுத்தும் முயற்சியாக, தற்போதைய நிலைமை பற்றி விவாதிக்கவும், வரி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூடுதலான ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் சுவிச்சர்லாந்து இந்தியாவிற்கு ஒரு குழுவை அனுப்பவுள்ளது.
மேலும் உலகளாவிய தன்னியக்க வரி தகவல் பரிமாற்ற முறையைக் கொண்டுவருவதற்கான ஒரு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பை (OECD) உருவாக்கவும் ஸ்விட்சர்லாந்து ஒப்புக் கொண்டுள்ளது, இது செயல்பாட்டுக்கு வந்த பின்னர், இந்தியாவுடனான தகவல் பரிமாற்ற நுட்பம் மேலும் விரிவடையும் என சுவிஸ் அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.
கணக்கில் காட்டபடாத அதிகளவு பணத்தை சுவிஸ் வங்கிகளில் மறைத்து வைத்திருக்கும் இந்தியர்களின் வரி சம்பந்தமான தகவல்கள் சுவிச்சர்லாந்த நாட்டு வங்கிகளிடம் இருந்து சரியான மற்றும் முழுமையான தகவல் பெற இந்தியா அரசு முனைந்துள்ளது. வங்கி ரகசிய சீர்திருத்த முறையை செயல்படுத்துவதற்கு ஆல்பைன் நாடு முயற்சி எடுத்தபோதிலும், ஸ்விட்சர்லாந்து இன்னும் ஒரு புகலிடமாக உள்ளது எனவும், தகவல்களை பகிர்ந்து கொள்வதில் அது தயக்கம் தெரிவிக்கிறது என அந்நாட்டின் நிதி அறிக்கை தெரிவித்துள்ளது.
தீவிர முயற்சிகள்
மறைமுக எண்ணங்களைக் களைவதற்கு, சுவிஸ்ஸின் நிதி அமைச்சகம் வெளிப்படையான முறையில் இந்திய அதிகாரிகளிடம் சுவிஸ் சட்ட நடைமுறைகள் பற்றி விளக்க தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.
அதிரடி பதில்
இதற்காக, தற்போதைய நிலைமை பற்றி விவாதிக்கவும், தேவைப்பட்டால் செயற்பாடுகளை அதிகரித்து வரி சம்பந்தமான விஷயங்களில் அதிக ஒத்துழைப்பை வழங்கவும், சுவிஸ் நாட்டில் இருந்து ஒரு குழு புதுடெல்லிக்கு வருவதற்கு தயாராக உள்ளது என சுவிஸ் நிதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் ஈமெயில் கேள்விகளுக்கான பதிலில் PTIக்கு பதில் தெரிவித்தார். சுவிஸ் நாட்டிற்கும் இந்தியவிற்கும் இடையே ஒரு நட்பு ரீதியான உறவுமுறை காணப்படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தகவல் பறிமாற்றம்
தற்போது, இந்தியாவிற்கு அளிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் இந்தியா உட்பட சர்வதேச தரங்களை அடிப்படையாக கொண்ட இரட்டை வரி விதிப்பை தவிர்க்கும் உடன்படிக்கையை படியே அளிக்கப்படும் என சுவிஸ் நாட்டின் நிதி அமைச்சம் தெரிவிக்கின்றது. இருப்பினும், OECD வரிக் கொள்கையைக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில், சுவிஸ் அக்டோபர் 15ல் கையெழுத்திட்டது, ஆனால் இது இன்னும் அமுலுக்கு வரவில்லை.
மேம்படும் உடன்படுக்கை
இத்திட்டம் அமுலுக்கு வந்துவிட்டால், இந்தியாவிற்கும் சுவிஸ் நாட்டிற்கும் இடையிலான தகவல் பரிமாற்றம் மேலும் முறைப்படுத்தப்படும் என இந்திய நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
14,000 கோடி மதிப்பீடு..
ஐரோப்பாவின் தேசிய மத்திய வங்கியின் அண்மைய தகவலின் படி, சுவிஸ் தேசிய வங்கியில் இந்தியர்களால் வைப்பு செய்யப்பட்டுள்ள 9,000 கோடி (1.42 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்க்ஸ்) 2012 இன் இறுதியில் 14,000 கோடிகளாக (2.18 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்க்ஸ்) மதிப்பிடப்பட்டுள்ளது.
கள்ளப்பணம்..
2012 ம் ஆண்டில் உலகம் முழுவதிலும் உள்ள பெரும் புள்ளிகளால் சுவிஸ் வங்கியில் வைப்பு செய்யப்பட்டிருந்த 1.65 திரில்லியன் டாலர்கள் சுமார் 1.5 திரில்லியன் டாலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications