சென்னை: தமிழ்நாட்டில் மின்வெட்டு சகஜமாகிவிட்ட நிலையில் வார்த்தகர்களின் மின்பற்றாக்குறை குறித்தும் அதனை களைய தமிழக அரசின் திட்டமான சூரிய ஆற்றல் கொள்கையை செயற்படுத்துவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார தீர்ப்பாயம் செவ்வாய்க் கிழமையன்று கனரக மின் நுகர்வோருக்கு பயன்படும் வகையில் சூரியா சக்தியின் மூலம் சுமார் 3,000 மொக வாட் மின்சாரத்தை 2015ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி செய்யும் திட்டம் சூறித்த அரசின் உத்தரவினை ரத்து செய்தது.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) சூரிய ஆற்றல் கொள்முதலுக்கான கோரிக்கையை ஒத்திவைத்துள்ளதாக மின்சாரத்திற்கான சென்னை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி கற்பக விநாயகம் கூறினார்.
பாற்றாக்குறை
2012 அக்டோபர் 20 -ல் தமிழ்நாடு அரசு இன்னும் மூன்று ஆண்டுகளில் 3,000 மெகாவாட் சூரிய ஆற்றலை உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்று ஒரு சோலார் கொள்கையை வெளியிட்டது. ஆனால் தற்போது நாட்டில் 20 மெகாவாட் சூரிய ஆற்றல் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
6% மின்சாரம் உற்பத்தி
அந்த சூரிய கொள்கையின்படி நாட்டில் கனரக தொழிற்சாலைகளுக்காக மின்சாரம் நுகர்வோர் டிசம்பர் 2013-ல் தங்கள் தேவைப்படும் மொத்த ஆற்றலில் 3% சூரிய ஆற்றலிலுருந்து பெற வேண்டும் என்றும், ஜனவரி 2014ஆம் ஆண்டிலிருந்து 6% சூரிய ஆற்றல் உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்க்ப்பட்டது.
இலக்கை அடைவது எப்படி
இந்த இலக்கை சூரிய ஆற்றலை வாங்குவதன் மூலமோஅல்லது சூரிய ஆற்றலை உற்பத்தி செய்ய தொகுதிகளை நிறுவுவதன் மூலமோ இதை செய்ய முடியும். குறைந்தது ஒரு வருடத்திற்கு 1000MW சூரிய ஆற்றலையாவது உற்பத்தி செய்வது அரசின் திட்டமாக இருந்தது.
அதிகப்படியான மின் தேவை
ஒரு மாதத்திற்கு பின்னர், மாநில அரசு TNERC -ஐ சோலார் கொள்கைகளை நடைமுறை படுத்த ஆணைகளை வழங்குமாறு தூண்டியது. தொழில்நுட்ப பூங்காக்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், கல்வி நிறுவனங்கள், தொலைதொடர்பு கோபுரங்கள் மற்றும் 20,000 சதுர அடி கொண்ட கட்டிடங்கள் ஆகியவை அதிக மின்சக்தி பயன்படுத்துபவர் பட்டியலில் அடங்கும்.
நிலுவையில் உள்ள வழக்கு
ஆனால் ஒரு வருடத்திற்கு முன்பு தமிழ்நாடு மின்சார நுகர்வோர் சங்கம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் 2010-ல் TNERC பிறப்பித்த உத்தரவு படி வர்தக்கத்திற்காக மின்சாரம் நுகர்வோரின், "காற்று ஆற்றல் மற்றும் சிறிய பகுதி சூரிய ஆற்றலை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான கோரிக்கை நிலுவையில் உள்ளதாக கூறியது.
TNERC சூரிய கொள்கை செயல்படுத்த வேண்டும் என்ற மாநில அரசாங்கத்தின் உத்தரவிற்கும், ஆட்சேபணை மனுவினையும் தமிழ்நாடு மின்சார நுகர்வோர் சங்கம் தாக்கல் செய்துள்ளது.
அதிகம் பாதிப்புக்குள்ளான நூற்பாலை
தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் தனியாக பதிவு செய்துள்ள மனுவில் தாங்கள் சூரிய கொள்கையை நாங்கள் அதரிக்கின்றோம் என்றும்,மாநில அரசு மற்றும் மூன்றாவது உற்பத்தியாளர்களால், தங்களுக்கு வழங்கப்பட்ட சூரிய ஆற்றல் பற்றாக்குறையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
காற்றாலை
தமிழ்நாடு உற்பத்தி மொத்த உற்பதியான 7,000 மெகாவாட் காற்று ஆற்றளில் சுமார் 3,000 மெகாவாட் காற்று ஆற்றலை நூற்பாலைகள் உற்பத்தி செய்வதாக என்று அவர் மேலும், கூறினார்.