கட்டுமான வசதிகளை மேம்படுத்த 2ஜி ஏலத்தில் கிடைத்த நிதி பயன்பெறும்!! நிதி அமைச்சகம்..

டெல்லி: பிப்ரவரி 2013-க்கான பட்ஜெட்டை தயார் செய்த பின்னர், நிதி பற்றாக்குறையை கட்டுக்குள் வைக்க கடும் பிரயத்தனம் செய்து வரும் நிதியமைச்சர் திரு.ப.சிதம்பரத்திற்கு, அவருடைய சமீபத்திய தொலைதொடர்பு ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் வெற்றி உதவும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதன் கிழமையன்று, திட்டமிடப்பட்டிருந்த பத்திர ஏலத்தை, அரசாங்கத்தின் 'நிதி நிலை மற்றும் நிதி தேவை' ஆகிய காரணங்களுக்காக இந்திய ரிசர்வ் வங்கி இரத்து செய்ததால், இந்த போனஸ் வாய்ப்பை திரு.ப.சிதம்பரம் பெற்றுள்ளார்.

தொலைதொடர்பு ஸ்பெக்ட்ரம் ஏலம் அல்லது மூலதன குறைப்பு போன்ற வழக்கத்தில் இல்லாத சொத்துக்களை விற்பது போன்ற செயல்பாடுகள் மூலம் வருடாந்திர நிதி இடைவெளியை குறைப்பது மோசமான ஒரு விஷயமாகும். இந்திய பொருளாதாரத்தின் போட்டியிடும் நிலையை வலுப்படுத்தும் விதமாக, இந்த பணம் புதிய மூலதன சொத்துக்களை உருவாக்க பயன்படுத்த வேண்டும்.

நிதி சேகரிப்பு

நிதி சேகரிப்பு

கடந்த 5 ஆண்டுகளாக அரசாங்கம் 78,000 கோடி ரூபாயை மூலதன குறைப்பு மூலம் சேகரித்துள்ளது. மேலும் ரூ.1.5 டிரில்லியன் டாலர் அளவிற்கு தொலைதொடர்பு ஏலங்களின் மூலமும் சேகரித்துள்ளது.

மேம்பாட்டு திட்டம்

மேம்பாட்டு திட்டம்

இந்த பணத்தை சாலைகள் அமைக்கவும், பள்ளிகள் கட்டவும், அணைக்கட்டுகள் அல்லது குடிநீர் வசதிகள் போன்றவற்றிற்காக இந்த பணத்தை செலவிட வேண்டும். ஆனால், இதற்கு மாறாக, மானிங்கள் போன்ற விஷயங்களுக்காக மிகவும் செலவுகள் அதிகளவு அதிகரித்து விட்டதால், அரசாங்க பட்ஜெட்டின் வருடாந்திர வருமான இடைவெளிகளை நிரப்புவதற்காக செலவிடப்பட, உபயோகமில்லாமல் போய் வருகிறது.

2ஜி மற்றும் 3ஜி ஏலம்

2ஜி மற்றும் 3ஜி ஏலம்

2010-ம் ஆண்டில் ஆக்ரோஷமாக பெரு வெற்றி பெற்ற 3ஜி மற்றும் 4ஜி ஏலங்களுக்குப் பின்னரும், ரூ.1 டிரில்லியன் எப்படி குறைந்தது என்று மேலும் கவனிக்க முடியவில்லை அந்த பணம் அந்த ஆண்டின் நிதி இடைவெளியை குறைக்க பயன்படுத்தப்படும்.

கட்டுமான வசதிகளை

கட்டுமான வசதிகளை

இது போன்று நிதிகளை தவறாக பயன்படுத்துவதை எப்படி தவிர்க்க முடியும்? சொத்துக்களை விற்பதன் மூலம் கிடைக்கும் பணம் அரசங்கத்திற்கு நேரடியாக கிடைக்கும் வகைசெய்ய ஒரு நிதியின் தேவை இந்தியாவிற்கு உள்ளது. இந்த பணத்தைக் கொண்டு கட்டுமான வசதிகளை உருவாக்க பயன்படுத்தலாம்.

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

இந்த யோசனை சற்றே பழையது தான். திரு.ஜி.வி.இராமகிருஷ்ணா அவர்கள் மூலதன குறைப்பு ஆணையத்தின் தலைவராக இருந்த பொழுது இந்த யோசனையை முதன்முதலில் வெளியிட்டார். 2004 தேர்தலுக்கு முன்னர் திரு.ஜஸ்வந்த் சிங், இந்த கருத்தை தன்னுடைய பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார். அதே ஆண்டு நிதியமைச்சராக பொறுப்பேற்ற திரு.ப.சிதம்பரமும் இது போன்ற தேசிய மூலதன நிதிக்கு சாதகமாக பேசியிருந்தார்.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள்

சொத்துக்களை விற்பதன் மூலம் வரக்கூடிய இந்த பணத்தை வீணடிக்க அரசியல்வாதிகள் மிகவும் உறுதியா உள்ளனர். அது இந்த ஆண்டும் கூட நடக்கும். எனவே, தேசிய மூலதன நிதி என்ற கருத்துக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும், எனவே ஒரு-முறை குறைப்பை மிகவும் உபயோகமாக பயன்படுத்தலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+