டெல்லி: வாடிக்கையாளர் எண்ணிக்கை அடிப்படையில் உலகின் நான்காவது பெரிய நிறுவனமான பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் ஆப்ரிக்கா நாட்டின் செயல்பாடுகள் முடக்கும் தருவாயில் இருந்தது. ஆனால் இப்போது இந்நிறுவனம் தனது நிர்வாக அமைப்பை மறுவடிவமைக்க உள்ளதாகவும் 17 ஆப்பிரிக்க நாடுகளை நான்கு வர்த்தகத்திறன் மிக்க பிரிவுகளாக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
ஜாம்பியா, காங்கோ-பிராஜாவில், மலாவி, புர்கினா ஃபாஸோ, நிஜர், சாட், மடகாஸ்கர் மற்றும் செஷெல்ஸ் உள்ளிட்ட நாடுகளை அடக்கிய பிரிவுக்கு வி.ஜி.சோமசேகர் செயல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஏர்டெல் செய்தி வெளியிட்டுள்ளது. அவர் இதற்கு முன் ஏர்டெல்லின் அதிக வருமானம் ஈட்டித்தரும் உகாண்டா நாட்டுப் பிரிவின் இயக்குனராக 2010ஆம் ஆண்டு முதல் பதவிவகித்து வந்தார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிறிஸ்டோஃப் ஸூலே
கிறிஸ்டோஃப் ஸூலே கானா, கென்யா, டான்சானியா, கெபான், உகாண்டா, சியரா லியோன் மற்றும் ருவாண்டா நாடுகளை உள்ளடக்கிய பிரிவின் செயல் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செகுன் ஒகுன்சான்யா
செகுன் ஒகுன்சான்யா மற்றும் லூயிஸ் லுபாலா ஆகிய இருவரும் முறையே நைஜீரியா மற்றும் காங்கோ குடியரசு பிரிவின் தலைவர்களாக தொடர்வார்கள்.
கிறிஸ்டியன் டி ஃபாரியா
அனைத்து பிரிவுகளின் தலைவர்களும் ஏர்டெல் ஆப்ரிக்காவின் தலைமை நிர்வாகி கிறிஸ்டியன் டி ஃபாரியாவின் கீழ் பணியாற்றுவார்கள். இந்த மறு வடிவமைப்பு கடந்த மாதங்களில் இலங்கையும் வங்காளமும் தெற்காசிய செயல்பாடுகளுக்குள் கோபால் விட்டல் தலைமையின் கீழ் கொண்டுவரப்பட்டதை அடுத்து நடந்துள்ளது.
மனோஜ் கோஹ்லி
இந்த மறுவடிவமைப்பு முன்பு இருந்த பன்னாட்டு வர்த்தக நிர்வாகி மனோஜ் கோஹ்லி -யின் கீழ் பல்வேறு கலாச்சார மற்றும் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டிருந்ததிலிருந்து மாற்றமடைந்தது. அப்போது நைஜீரியா, ஆங்கிலம் பேசும் நாடுகள் மற்றும் ஃப்ரெஞ்சு பேசும் நாடுகள் என தனிப்பிரிவுகளாக இருந்தன.
நிர்வாக மறுசீரமைப்பு
இந்த புதிய பிரிவுகள் அந்நிறுவன உள்நாட்டு சந்தை அமைவிடத்தைப் பொறுத்து பிரிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications