டெல்லி: அரசின் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஏலத்தின் ஏழாவது நாளான இன்று நிறுவனங்கள் சற்று நிதானமாக ஏலத்தைக் கையாண்டதோடு 1800 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 900 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளுகான ஏலத் தொகை 56,554 கோடி ரூபாய்க்கு 43 சுற்றுகளில் உயர்த்தின. அதில் அரசின் வருவாய் மட்டும் 16,750 கோடியாகும்.
900 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைக்கு மிகுந்த போட்டி இருந்ததுடன் டெல்லி பகுதியில் சேவை வழங்க அதிக வரவேற்பைப் பெற்றிருந்தது. டெல்லியில் உள்ள 16 பகுதிகளுக்கு 21 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதனால் ஒரு அலைவரிசையின் விலையானது 67 சதவிகிதம் உயர்ந்து நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக 574.08 கோடி ரூபாயை எட்டியது.
மும்பையில் 900 மெகாஹெர்ட்ஸ் ஏல விலை 563.09 கோடியாக 71 சதவிகிதம் உயர்ந்து காணப்பட்டது. கொல்கட்டாவில் அது 54 சதவிகிதம் உயர்ந்து 192.71 கோடியாக இருந்தது. மும்பை மற்றும் கொல்கட்டாவில் 43வது சுற்றின் போது வரவேற்பு சற்று குறைவாகவே காணப்பட்டது.
விலை உயர்வு..
1800 மெகாஹெர்ட்ஸ் ஏலம் அஸ்ஸாம், மேற்கு வங்காளம் மற்றும் பீகாரில் அதிக தேவையைக் கண்டதோடு அடுத்த சுற்றுகளில் விலை உயரவும் என நம்பப்படுகிறது.
43வது சுற்று
எனினும் 43வது சுற்றின் முடிவில் 1800 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைக்கான ஏல விலை, டெல்லி, குஜராத், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உயர்வைக் கண்டதுடன் அதிக தேவையும் காணப்பட்டது.
ஆரோக்கியமான ஏலம்
"மெதுவான மற்றும் திடமான ஏலம், மிகவும் ஏற்றத்தாழ்வான தேவைகள் மற்றும் முன்வைக்கப்பட்ட ஏல தொகுதிகள், ஏலம் அளவுக்கு அதிகமாக இருப்பதைக் காட்டுகிறது" என மும்பையை சேர்ந்த ஒரு பன்னாட்டு தொலைத்தொடர்பு தரகு வல்லுநர் தெரிவித்ததார்.
ஏர்டெல், வோடபோன், ஐடியா
பாரதி ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் ஏலத்தில் பங்கெடுத்துக்கொண்டதொடு 900 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசைக்குப் கடுமையா போட்டியிட்டுக் கொண்டன.
பங்கு நிலவரம்
இந்த ஏலத்தின் போது ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் 0.63 சதவிகிகிதம் வீழ்ச்சியடைந்து 314.45 ரூபாய்க்கும், ஐடியா-வின் பங்குகள் செவ்வாயன்று 8 சதவிகிதம் வரை உயர்ந்து பின் 4.6 சதவிகிதம் வீழ்ச்சியடைந்து 144.20 ரூபாய்க்கும் விற்றன. ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் 0.89 சதவிகிதம் உயர்ந்து 125.35 ரூபாய்க்கு விற்றது.
3ஆம் முறையாக ஏலம்
நவம்பர் 2012 மற்றும் மார்ச் 2013 ஏலங்களைத் தொடர்ந்து கடந்த 15 மாதங்களில் 2ஜி ஏலத்தை அரசு நடத்துவது இது மூன்றாவது முறையாகும். எனினும் கடந்த இரு முறை ஏலம் மிகவும் குறைவாக மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நடந்ததால் தோல்வியாகக் கருதப்பட்டது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை
ஏலத்திலிருந்து கிடைக்கும் வருவாயை கொண்டு, நடப்பு கணக்கு பற்றாக்குறையை 5 சதவிகிதத்திற்குள் வைக்க உதவும் என நிதிஅமைச்சகம் தெரிவித்தது. (உங்க முடிவு எல்லாம் நல்லாதான் இருக்கு ஆன பினிஷிங் சரி இல்லையே)
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications