மும்பை: முகேஷ் அம்பானி தலைமையில் செயல்படும் தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, நடந்து முடிந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் சுமார் 11,504 கோடி ரூபாய் முதலீடு செய்து 14 வட்டாரங்களில் தனது டெலிகாம் சேவையை தொடர திட்டமிட்டுள்ளது.
பிராட்பேண்ட் வயர்லெஸ் அக்செஸுக்கான (பிடபிள்யுஏ) பான்-இந்தியா லைசென்ஸ் வைத்துள்ள இந்நிறுவனம் அது தற்போது கையகபப்டுத்தியுள்ள ஸ்பெக்ட்ரமைக் கொண்டு வாய்ஸ் மற்றும் டேட்டா டெலிஃபோனியை 1800 மெகா ஹெர்ட்ஸ் பேண்டில் வழங்க ஏற்பாடுகள் செய்து வருகிறது.
ஜியோ அதன் சமீபத்திய ஸ்பெக்ட்ரமை டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய மூன்று முக்கிய மெட்ரோ நகரங்களிலும், ஏ பிரிவைச் சேர்ந்த வட்டாரங்களிலும் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கையகப்படுத்தும் திட்டத்தின் மூலம், லிபரலைஸ்ட் ஸ்பெக்ட்ரமை அதிக அளவில் கொண்ட, நீண்ட ஆயுளுடன் கூடிய ரெஸிட்யுவல் ஸ்பெக்ட்ரமை வைத்துள்ள நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது ரிலையன்ஸ் ஜியோ.
4ஜி நெட்வோர்க்
1800 மெகாஹெர்ட்ஸின் மீதான எஃப்டிடி-எல்டி, 2300 மெகாஹெர்ட்ஸின் மீதான டிடிடி-எல்டி ஆகியவற்றை இன்டெக்ரேடெட் ஈகோசிஸ்டம் ஒன்றின் மூலம் உபயோகித்து, இடைவெளியற்ற முறையில் வழங்கப்படக் கூடியதான ரிலையன்ஸ் ஜியோவினுடையை 4ஜி சேவைகளின் நோக்கம்.
உயர்தர சேவை..
நவீனமான டிஜிட்டல் கன்டென்ட், அப்ளிக்கேஷன்கள் மற்றும் சர்வீஸ்கள் போன்றவற்றிற்கு உயர்தர அக்செஸை வழங்குவதே ஆகும்." என்று ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் சேர்மனும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் டி. அம்பானி தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ
ரிசர்வ் விலைக்கு 31 சதவீதம் ப்ரீமியம் செலுத்தி இந்த ஸ்பெக்ட்ரம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. 900 மெகாஹெர்ட்ஸ் பேண்டிலான ஸ்பெக்ட்ரத்தை கைக்கொள்ள சில ஆபரேட்டர்கள் செலுத்திய 55 சதவீதம் முதல் 110 சதவீதம் ப்ரீமியம் தொகையுடன் ஒப்பிடுகையில் இது குறைவான தொகை என்று இந்நிறுவனம் கூறியுள்ளது.
ஏ, பி, சி பிரிவு
இந்நிறுவனத்திற்கு ஆந்திர பிரதேசம், குஜராத், கர்நாடகா, மஹாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய இடங்களிலும் தனது சேவையை அளித்து வந்தது. கேரளா, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகியவற்றின் பி பிரிவு வட்டாரங்களிலும் அலைவரிசையை இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதிக போட்டி நிலவிய சி பிரிவைச் சேர்ந்த அஸ்ஸாம் வட்டாரம், ஒரிஸ்ஸா மற்றும் வடகிழக்குப் பகுதிகளிலும் இந்நிறுவனம் ஸ்பெக்ட்ரமை சொந்தமாக்கியுள்ளது.
33% முன்பணம்
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக டிஓடியினால் விடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததைப் போல் ஸ்பெக்ட்ரம் வாங்குவதற்கான மொத்தத் தொகையில் சுமார் 33 சதவீதத்தை முன் கட்டணமாக செலுத்தி விடுவதாகவும், இரண்டு வருட கடன் தவணையுரிமை காலத்துக்குப் பின் மீதமுள்ள தொகையை 10 சரிபாதி வருடாந்தர தவணைகளில் கட்டி விடுவதாகவும் ரிலையன்ஸ் கூறியுள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications