புதிய வங்கி உரிமங்களுக்கான அறிக்கையை சமர்ப்பித்தார் பிமல் ஜலான்!! ஆர்பிஐ

மும்பை: பிமல் ஜலான் தலைமையிலான நான்கு உறுப்பினர்களை கொண்ட குழுமம் புதிய வங்கிகளின் உரிமங்கள் குறித்த தங்கள் அறிக்கையை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவிடம் கடந்த செவ்வாயன்று சமர்ப்பித்தது. ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் முன்னாள் கவர்னரான பிமல் ஜலான் 4 மணி நேர நீண்ட சந்திப்பிற்கு பிறகு மத்திய வங்கியிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்ததை உறுதி செய்தார்.

தனியார் துறையில் 25 புதிய வங்கிகளின் விண்ணப்பத்தை பிமல் ஜலானிடம் திறன் தணிக்கை சோதனைக்கு அவரை தலைவராக நியமித்து ஒரு உயர் மட்ட ஆலோசனை குழுமம்வை ஆர்பிஐ அமைத்தது. புதிய வங்கிகளுக்கான உரிமங்கள் வழங்குவதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் ஆர்பிஐ வெளிப்படையான, உறுதியான உயர்ந்த தரத்தையும், அக்கறையுடன் கூடிய விடாமுயற்சியையும் கொண்டு செயல்படும் வங்கிகளுக்கு உரிமம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஆர்பிஐ

ஆர்பிஐ

புதிய வங்கிகளின் உரிமங்களுக்கான தனது வழிகாட்டுதல்களை பிப் 20 அன்று ஆர்பிஐ வெளியிட்டது. ஜூன் முதல் வாரத்தில் இது குறித்த தனது விளக்கங்களையும் வெளியிட்டது. புதிய வங்கிகளின் உரிமங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூலை 1 2013 என்றும் அறிவிக்கப்பட்டது.

ஜாக வாங்கிய டாடா

ஜாக வாங்கிய டாடா

ஆர்பிஐயிடம் சமர்ப்பிக்கப்பட்ட 27 விண்ணப்பங்களில் டாடா சன்ஸ் நிறுவனம் மற்றும் வேல்யூ இன்டஸ்டிரீஸ் நிறுவனம் ஆகிய இரு நிறுவனங்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டன. தகுதியான ஏஜென்சிகளிடமிருந்தும் நிதி அறிக்கைகளின் மூலமும் பெறப்பட்ட தகவல்களை ஆராய்ந்து அறிந்து விண்ணப்பதாரர்களின் மீதான நற்சான்றுகளையும் நேர்மையையும் அறியப்பட்ட கருத்தாக உருவாக்க ஆர்பிஐ முற்பட்டது.

நற்சான்று

நற்சான்று

விண்ணப்பதாரர்கள் மற்றும் அவற்றின் குழுமம் நிறுவனங்கள் மீதான நற்சான்றுகளையும், நேர்மையையும் தெரிவிக்கப்பட்ட முடிவாக பயிற்றுவிக்கும் பொருட்டு, புலனாய்வு முகவர்களிடமிருந்தும் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் செயல்பட்டு வரும் நிதி துறை கட்டுப்பாட்டாளர்களிடமிருந்தும் பெறப்படும் அறிக்கைகள் பொருந்தும்.

தனியார் நிறுவனங்கள்

தனியார் நிறுவனங்கள்

புதிய வங்கிகள் உரிமங்களுக்காக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம்மம், ஆதித்யா பிர்லா குழுமம், பஜாஜ் பைனான்ஸ், முத்தூட் பைனான்ஸ், எல்&டி பைனான்சிங் ஹோல்டிங்ஸ், இந்தியா புல்ஸ் ஹௌசிங் பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

அரசு துறை நிறுவனங்கள்

அரசு துறை நிறுவனங்கள்

மேலும் இவற்றுடன் பொதுதுறை நிறுவனங்களான இந்தியா போஸ்ட் மற்றும் ஐஎஃப்சிஐ ஆகியவையும் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+