டெல்லி: இந்தியாவில் வங்கிகளை திறக்க முனைப்புடன் செயல்படும் இந்திய தாபல் துறை, அதற்கான விண்ணப்பத்தையும் ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்துள்ளது. இந்நிலையில் தபால் துறை தனது சேமிப்பு வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் சுமார் 3,000 ஏடிஎம்களையும், 1.35 லட்சம் சிறு-ஏடிஎம்களை இந்தியா முழுவதிலும் உள்ள தனது கிளை அலுவலகத்தில் செப்டம்பர் 2015 மாதத்திற்குள் நிறுவ திட்டமிட்டுள்ளது.
இச்செய்தியை பற்றி தபால் துறையை அனுகியபோது, இந்திய தபால் துறை செயலாளர் பத்மினி கோபிநாத் கூறுகையில் "இந்த ஏடிஎம்களை அதிக வாடிக்கையாளர்கள் கொண்ட கிளைகளின் அடிப்படையில் நிறுவ திட்டமிட்டுள்ளோம், இதனை பொருத்து டெல்லி, சென்னை மற்றும் பெங்களுரூ பகுதிகளில் முதற்கட்டமாக இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்." என செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
4000 ஏடிஎம்கள்
முதல் வருடத்தில் 1,000 ஏடிஎம்களை நிறுவ முழுவேகத்தில் செயல்பட உள்ளோம், பின்னர் அடுத்த 18 மாதங்களில் 3,000 ஏடிஎம்களை நிறுவவும் திட்டமிட்டுள்ளோம் என தபால் துறை செயலாளர் பத்மினி கோபிநாத் தெரிவித்தார். இந்த ஏடிஎம் சேவையை முதலில் 26 கோடி சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர் மட்டுமே செயல்படுத்த முடியும், பின்நாட்களில் இதனை அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
வங்கியிலும் பயன்படுத்தலாம்
இந்த ஏடிஎம் சேவையில் இந்திய தாபல் துறை மற்றும் தேசிய நிதி சேவை நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதனால் வாடிக்கையாளர்கள் தங்களின் சேமிப்பு பணத்தை வங்கி ஏடிஎம்களிலும் எடுத்துக்கொள்ள முடியும்.
இன்போசிஸ்
இந்த தபால் துறையில் புதிய ஏடிஎம் சேவைக்கு மென்பொருள் கட்டுமானத்தில் இன்போசிஸ் நிறுவனம் செயல்பட உள்ளது.
1.55 லட்ச கிளைகள்
இந்திய தபால் துறை, இந்திய முழுவதும் 1.55 லட்ச கிளைகளை கொண்டு செயல்பட உள்ளது, இதில் 90 சதவீதம் கிராமபுரங்களில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications