மும்பை: இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான டெக் மஹிந்த்ரா மற்றும் மது உற்பத்தி நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனமும் மார்ச் 28ஆம் தேதி முதல் தேசிய பங்கு சந்தை குறியீட்டில் பட்டியலிடப்பட உள்ளது. யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் சரிபாதி பங்குகள் டியாஜியோ நிறுவனம் கைபற்றியது குறிப்பிடதக்கது.
தேசிய பங்கு சந்தை குறியீட்டில் பட்டியலில் ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் மற்றும் ரான்பாக்ஸி லேபாரட்டிரீஸ் நிறுவனங்கள் வெளியேறியதால் இவ்விறு நிறுவனங்களும் இப்போது உள்ளே நுழைகிறது.
மேலும் சிஎன்எக்ஸ் வங்கி குறியீட்டில் யூனியன் வங்கி வெளியேறி, பெடரல் வங்கி நுழைகிறது.
அதேபோல் நிப்டி மிட்கேப் 50 குறியீட்டில் நிறுவனங்கள் மாற்றம் செய்யப்படுகிறது, அதில் ஹெக்சாவேர் டெக்னாலஜிஸ், ஹவுசிங் டெவல்ப்மென்டு மற்றும் உட்கட்டமைப்பு அமைப்பு மற்றும் ஜேஎஸ்டபள்யூ ஆகிய நிறுவனங்களுக்கு பதிலாக பைனான்சியல் ஸ்டாக் பேங்கு ஆஃப் இந்தியா, கனரா வங்கி மற்றும் பவர் பைனான்ஸ் கார்ப் நிறுவனங்கள் நுழைகிறது.