சென்னை: இன்போசிஸ் நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்ட இன்ட்ராநெட் அறிவிப்பில், ப்ராஜெக்ட் மேலாளர்கள் மற்றும் மூத்த ப்ராஜெக்ட் மேலாளர்கள் ஆகியோர்யோருக்கு 5%-7% வரை ஊதிய உயர்வினை பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்போசிஸ் நிறுவனம் ஏப்ரல் மாதத்திலிருந்து ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அந்நிறுவன ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருந்ததாக கூறுகின்றன. இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி ஓய்வை அறிவித்த பின்னர் மீண்டும் நிர்வாகி பொறுப்புடன் நிறுவனத்திற்கு திரும்பிய ஒரு மாதத்திற்கு பின், கடைசியாக 8% சராசரியை கொண்ட ஊதிய உயர்வு கடந்த ஜூலை மாத இறுதியில் அறிவிக்கபட்டிருந்தது.

நிறுவனத்திலுள்ள மூத்த ஊழியர்கள் (தரம் 6 -க்கு மேலே) மற்றும் ஆன் - சைட் ஊழியர்கள் ஆகியோருக்கான ஊதிய உயர்வு குறித்து முடிவு செய்யும் வழிமுறையில் செயல்பட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பொதுவாக இன்போசிஸ் நிறுவனத்தில் ஊதிய உயர்வு ஏப்ரல்-மே காலகட்டங்களில் அறிவிக்கப்படுவதே வழக்கம். எனினும் இந்த வழக்கமானது கடந்த 2 ஆண்டுகளாக மாற்றப்பட்டது குறிப்பிடதக்கது.
சற்றே குறைவு
நிறுவனத்தின் இன்ட்ராநெட் அறிவிப்பிற்கு பின் சில மணி நேரம் கழித்து, ஒரு முதலீட்டாளர் அழைப்பில் நாராயண மூர்த்தி, 2013-14 -ல் நிறுவனத்தின் செயல்திறன் தாங்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக இல்லை என்றும், நாஸ்காம் கணித்திருந்த சராசரி வளர்ச்சிக்கு சற்று குறைவான வளர்ச்சியையே நிறுவனம் கண்டிருப்பதாகவும், இந்த நேரத்தில் நிறுவனத்தின் வளர்ச்சி இரட்டிப்பாயிருக்க வேண்டும்.
ஆனால் மகிழச்சி கொள்ளும் அளவிற்கு நிறுவனத்தின் செயல் திறன் இல்லை என்றும் அவர் கூறினார்.2015-ன் முதல் காலாண்டில்,எஸ்.டி ஷிபுலால்,மற்றும் எஸ்,கோபாலா கிருஷ்ணன் ஆகியோர் நிர்வாகிகள் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற இருப்பதால் நிறுவனம் அமைப்பு குழு மாறுதல்களை எதிர் நோக்கி உள்ளதை அவர் உறுதி செய்தார்.
நிறுவனத்தின் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்து பேசிய திரு.மூர்த்தி, ஷிபுலாலின் இடத்தை நிரப்பும் "பொருத்தமான மாற்றினை" தேடும் முயற்சியில் நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும், நிறுவந்திற்கு கிடைக்க வேண்டிய தலைமை பண்பில் குறிப்பிட தகுந்த அளவு ஆலம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications